அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

ஜெய் ஆஞ்சநேயா!!!!!

மிக முக்கியக் குறிப்பு!
இந்தத் தலைப்பிலான ‘ஆஞ்சநேயர்’ குறித்த பதிவில், எளிதில் களைந்திட இயலாத சில பிழைகள் நேர்ந்ததால் அதன் உள்ளடக்கத்தை மாற்றி அமைத்திருக்கிறேன். பொறுத்தருள்க!

திய உணவு இடைவேளையில், பாலுவும் கேசவனும் அலுவலக வளாகத்திலிருந்த வேப்ப மர நிழலில் சென்று அமர்ந்தார்கள்.

வழக்கமாக அவர்கள் மதிய உணவு உண்பது அங்கேதான்.

“விஷயம் தெரியுமா?” என்றான் பாலு.

“சொல்லு” என்றான் கேசவன்.

“நம்ம ஸ்டெனோ சுகுமாரனோட மனைவி அவங்க வீட்டு மாடியில் குடியிருந்த பேச்சிலரைக் கூட்டிட்டு ஓடிட்டாளாம்.”

“நிஜமாவா?”

“உன்கிட்டே நான் ஏன் பொய் சொல்லணும்."

“அவன் செக்ஸ் விசயத்தில் கில்லாடி ஆச்சே! ‘அது’ விசயத்தில், பொண்ணுகளைத் திருப்திபடுத்தறது எப்படின்னு வயசு வித்தியாசம் இல்லாம எல்லாருக்கும் ‘பாடம்’ எடுப்பான். உடலுறவின் போது கையாள வேண்டிய டெக்னிக்ஸ், லேகியம், நைட்பில்ஸ் பத்தியெல்லாம் நிறையப் பேசுவான். ’அது’ விஷயத்தில் எல்லாம் தெரிஞ்ச அவன் வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?”

வியப்பின் விளிம்பைத் தொட்டிருந்தான் கேசவன்.

உடல் ரீதியா ஒரு பெண்ணைத் திருப்தி படுத்த முடியுமா என்பது இந்நாள்வரை கண்டறியப்படாத ரகசியம். பெண்ணுக்குப் போதும் என்ற மனம் இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகலாம். இது சுகுமாரனுக்குத் தெரிஞ்சிருந்தா எச்சரிக்கையா இருந்திருப்பான்.”

“உடலுறவில் திருப்தி அடையறது ஆண்களுக்கு மட்டும்தான் சாத்தியமானது. இல்லையா?”

“அப்படித்தான் எல்லா ஆண்களும் நினைச்சிட்டிருக்காங்க. அதுவும் தப்பு. ஆணின் உடம்பிலேயிருந்து உயிர்ச்சத்து வெளியேறியதும் கிடைக்கிற திருப்தி தற்காலிகமானது. வயசைப் பொருத்து, சந்திக்கிற பெண்ணைப் பொருத்து, சூழ்நிலையைப் பொருத்து, மிகச் சில மணி நேரங்களிலேயே மீண்டும் காமம் அரும்ப ஆரம்பிச்சிடும். அதைத் தணிக்க அவனுக்கு மீண்டும் பெண் தேவைப்படுகிறாள். பெண்ணாகட்டும் ஆணாகட்டும் உடலுறவில் திருப்தி என்பது சாத்தியமில்லாத ஒன்னு என்பதே என் நம்பிக்கை.”

“சரிதான். இந்தத் திருப்தியற்ற நிலைதான், மனுசங்களைக் காலமெல்லாம் வெறி பிடிச்சி அலைய வைக்குது” என்றான் கேசவன்.

ஒரு முறை அழகான ஒரு பெண்ணை அனுபவிச்சவன், இன்னும் அழகான பெண் கிடைச்சா அனுபவிக்கலாமேன்னு நினைக்கிறது இயற்கை. ஒரு தடவை பத்து நிமிசம் புணர்ச்சி செஞ்சவன், அடுத்த தடவை இன்னும் அதிக நேரம் செய்யணும்னு நினைக்கிறதும் இயல்புதான். இம்மாதிரி எண்ணங்களுக்கு அணை போட்டுத் தடுத்து நிறுத்துவது சமுதாயக் கட்டுப்பாடும், நம்மவர்கள் வகுத்துக்கொண்ட ஒழுக்க நெறிகளும்தான். அவற்றைப் பின்பற்ற நினைக்கிற மனசும் ஒரு முக்கிய காரணம்” என்றான் பாலு.

“உண்மைதான். இன்னும் வேணும் இன்னும் வேணும்னு அலையறதுக்கும் போதும்னு அடங்கி வாழறதுக்கும் மனசுதான் காரணம்.”

“மனசைப் பக்குவப்படுத்திப் பயிற்சியும் கொடுத்தா, பத்து நிமிசம் அனுபவிச்ச சுகத்தைப் பத்து மணி நேரம் அனுபவிச்சதாப் பாவிச்சி சந்தோஷம் காணமுடியும். ஒரே ஒரு தடவை அனுபவிச்ச இன்பத்தை மனசில் தேக்கி வெச்சி, ஒட்டு மொத்த வாழ்நாளையும் அது பற்றிய நினைப்பிலேயே கழிச்சிட முடியும். ஆனா மனுசங்க, இப்படியான எண்ணங்களை வளர்த்து இதுக்கான முயற்சிகளில் ஈடுபடுறதில்லை. வாழ்ந்து முடிக்கிறதுக்குள்ள அனுபவிச்சித் தீர்த்துடணும்னுதான் அலையறாங்க. விதி விலக்கானவங்க ஒரு சிலர்தான். இதுல ஆண் பெண்ணுங்கிற பேதங்களுக்கும் இடமில்லை. இன்னிக்கி முடிக்க வேண்டிய வேலை நிறைய இருக்கு. நாளை பேசுவோம்” என்று எழுந்தான் பாலு.

"என் வீட்டில் எனக்குப் பெண் பார்த்துட்டிருக்காங்க. கல்யாணம் பண்ணிக்கிறதை நினைச்சா பயமாயிருக்கு” என்றான் கேசவன்.

“பயப்பட ஒன்னும் இல்ல. இம்மாதிரியான நல்ல சிந்தனைகளை உன் வருங்கால மனைவிக்குச் சொல்லிப் புரிய வெச்சுடு. வாழ்க்கை சந்தோசமா கழியும்.”

கேசவனின் முதுகில் தட்டிக் கொடுத்தான் பாலு.
=======================================================================
இது, 2013ஆம் ஆண்டுப் படைப்பு