எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 21 அக்டோபர், 2020

'எதை'ச் செய்தால் இதையெல்லாம் பெறலாம்?!


நான் சேமித்து வைத்துள்ள மிகப் பழைய வார இதழ்களில்  ஒன்றைப் புரட்ட நேர்ந்தபோது, அதன் ஒரு பக்கத்தில், 'இதைச் செய்தால்.....' என்னும் தலைப்பில்  உடல்நலம் பற்றியக் குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. 

குறிப்புகள்:

*மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

*நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.

*புற்றுநோய், காச நோய் போன்றவை நெருங்கா.

*திடீர்த் தலைவலி, உடல்வலி எல்லாம் காணாமல் போகும். 

*ஆயுட் காலம் அதிகரிக்கும்.

*நிறையவே கலோரிகள் எரிக்கப்படும்.

*உடலின் அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்கும்.

*பெண்களின் மாதவிடாய்ப் பிரச்சினை குறையும்.

*ஆண்களின் பிராஸ்டேட்டில்[காமநீர்ச் சுரப்பி] வீக்கம் வராது.

*சுரப்பிகளின் செயல்பாடுகள் மேலோங்கும்.

*இதை 10 நிமிடம் செய்வது 50 மைல் ஜாக்கிங் செல்வதற்குச் சமம்.

*முதுமையிலும் இளமைத் தோற்றம் நீடிக்கும்.

'இதை'ச் செய்தால் என்று பொத்தாம் பொதுவாகத் தலைப்பு தரப்பட்டிருப்பதால், அந்த 'இது' 'எது?' என்று யோசித்ததில்.....

'மூச்சுப் பயிற்சி'[யோகா]யாக இருக்கக்கூடும் என்று தோன்றியது. ஆனால், இதன் மூலம் இத்தனை நன்மைகளைப் பெற இயலுமா என்னும் சந்தேகமும் எழுந்தது.

உங்கள் சிந்தனையில் வேறு காரணம் எதுவும் தோன்றக்கூடும்.

சிந்தியுங்களேன்!

===============================================================