ஞாயிறு, 1 நவம்பர், 2020

ஆபாசக் கதைகளின் பிறப்பிடமா மனுதர்ம சாஸ்திரம்?!?!?!?!?!?!?!?!

(பிரம்மாவானவர் மனுஸ்மிருதி சாஸ்திரத்தை உண்டு பண்ணி விதிப்படி பிருகு ரிஷிக்கு முன்னம் ஓதுவித்தார் ; பிருகு ரிஷியும் மரீசி முதலான ரிஷிகளுக்கு ஓதுவித்தார். (மனு அத் 1 சு58)

மனுஸ்மிருதியை (வருணாசிரம தர்மமாகிய வைதீகத் தர்மத்தை)விளக்கி, பிருகு ரிஷி மற்றுமுள்ள ரிஷிகளுக்குச் சொன்னார்.)

["வாசிக்க வேண்டாம்"னு சொல்லுதோ?!]
பிரம்மாவின் காம விகாரக் கதை: *பரமசிவன் - பார்வதி கல்யாணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தைப் பிரதட்சணம் வருகையில் இடது கையினால் முந்தானையைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு வந்தாள். அப்படி வருகையில் அவளுடைய இடையை ஒட்டிய தொடை பிரம்மா கண்களுக்குப் பட்டது. அதைப் பார்த்தவுடன் பிரம்மா மோகித்ததால் இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை ஓமகுண்டத்தைச் சுற்றியிருக்கும் கலசத்தில் விட்டான். உடனே அதில் அகஸ்தியன் பிறந்தான்.

*அதுபோலவே பிரம்மா மறுபடியும் தொடையைப் பார்க்க மேலும், இந்திரியம் ஸ்கலிதமாயிற்று. அதை விருட்சபச்சை முதலிய அநேக செடிகளில்விட வால்கில்லியாதி முதலிய அநேக ரிஷிகள் பிறந்தார்கள்.

*அவ்விடம் விட்டுப்போகும்போது ஒரு சுடலைச் சாம்பலில் இந்திரியத்தை விட அதில் பூரிச்சிரவனென்கிற இராட்சசன் பிறந்தான்.

*அவ்விடத்திலுள்ள எலும்புகளைப் பொறுக்கி ஒன்றாய்ச் சேர்த்து அதிலே இந்திரியத்தை விட சல்லியன் என்ற பராக்கிரமசாலி பிறந்தான்.

*அவ்விடம் விட்டுபோகையில், சிறிது இந்திரியம் ஸ்கலிதமாகிக் கீழே விழ அதை ஒரு பட்சி புசித்து அதன் வயிற்றில் சகுனி பிறந்தான்.

*பிறகு தடாகத்தில் கொஞ்சம் இந்திரியம் விட அதை மண்டூகம் (தவளை) புசித்து அதன் வயிற்றில் மண்டோதரியென்கிற பெண் பிறந்தாள்.

*மிகுந்த இந்திரியத்தைக் குளத்தில் தாமரைப் பூவில் விட அதில் பத்மை என்கின்ற புத்திரி பிறந்தாள்

*அந்தத் தன் புத்திரியான பத்மையின் அழகைக் கண்டு மோகித்து,  பிரம்மன் அவளைப் புணர விரும்ப, அவள் சம்மதிக்க மறுக்க அவளுக்குச் சமாதானமாக வேத வாக்கியத்தைச் சொன்னார் பிரம்மா: 

“மாதரமுபைத்ய கஸாரமுபைதி, புத்ரார்தீத

சகாமார்த்தி நாபத்திரலோகா நாஸ்தீத,

ஸர்வம்பரவோ விந்துஹஃ, தஸ்மாத் புத்ரார்த்தம்

மாதரம், ஸீரஞ்சதி , ரோஹதி.”

இதன் பொருள்- புத்திரார்த்த நிமித்தம் , தாய்,தமக்கை, மகள்,

பிள்ளை யாரோடாயினும் கூடலாம் என்பதாகும்.

*பின் காம விகாரத்தினால் இந்திரன் உத்திரவுப்படி திலோத்தமை 4 திசையிலும் ஆடியதால் பிரம்மாவுக்கு 4 தலையும் உயரப் பறந்து ஆடி 5 ஆவது தலையும் ஆட, மோகங்கொண்டு திலோத்தமையைத் தொடர்ந்து போகையில் ஈஸ்வரன் ஒரு தலையை அறுத்து எறிந்தான்.

*பின் பிரம்மன் காடுகளில் அலைந்து திரிகையில் ஒரு புதரிலிருந்த பெண் கரடியைக் கண்டு அதைக் கூடி அதன் வயிற்றில் கரடி முகத்தோடு ஓர் புத்திரன்[ஜம்புவந்தன்] பிறந்தான்.

*பின் ஊர்வசி என்பவளிடம் சில உடன்படிக்கை செய்து, முன் பத்மையிடத்தில் ஆக்குஷணஞ் செய்த அண்டத்திலுள்ள இந்திரியத்தை ஊர்வசி கர்ப்பத்தில் விட, அதில் வசிஷ்டன் பிறந்தான், அப்புத்திரனுக்குத் தன் பதவியைக் கொடுத்து பிரம்மா தபோவனமடைந்தார்.

கலைக்கோட்டு ரிஷி – மானுக்கும்

கவுசிகர் – குயத்திக்கும்

ஜம்பகர் – நரிக்கும்

வால்மீகி – வேடனுக்கும்

அகஸ்தியர் – குடத்திலும்

வியாசர் – செம்படத்திலும்

வசிஷ்டர் – ஊர்வசிக்கும்

காதனசல்லியர் – விதவைக்கும்

மாண்டவியர் – தவளைக்கும்

காங்கேயர் – கழுதைக்கும்

சவுனகர் – நாய்க்கும்

கணாதர் – கோட்டானுக்கும்

கர் – கிளிக்கும்

ஜாம்புவந்தர் – கரடிக்கும்

அஸ்வத்தாமன் – குதிரைக்கும் பிறந்தனராம்.

=================================================================================================

நன்றி: https://smuthukumaran.wordpress.com/2009/10/23/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF/