அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 2 மார்ச், 2021

ஆண்டுகள் இரண்டு! 500 பெண்களிடம் சீண்டல்!! அசிங்க சாதனை!!!

                                                    
சென்னை சாஸ்திரி நகர் பகுதியில் வசித்து வரும் 20 வயது இளம்பெண் ஒருவர் அலுவலகப் பணி முடிந்து வீட்டிற்கு நடந்து செல்லும் போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவான அந்த இளைஞரின் இருசக்கர வாகன எண்ணை வைத்துத் தேடல் வேட்டையில் ஈடுபட்டனர். 

தேடியதில், அந்த இரு சக்கர வாகனத்தில் வந்த நபர், பூந்தமல்லி அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்த சரண்(21) என்பது தெரியவந்தது. இதனையடுத்து  அவர்கள் விரைந்து சரணைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், தான் செல்லும் இடங்களிலெல்லாம் பெண்களைக் குறிவைத்துப் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகச் சரண் தெரிவித்துள்ளார். தனது படிப்பை முடித்துவிட்டுத் தற்போது பூந்தமல்லியில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் வசூல் பணியாளராகப் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பணம் வசூலிப்பதற்காகச் சரண் செல்லும்போது அந்த இடங்களில் பார்க்கக்கூடிய அழகான கல்லூரி மற்றும் இளம் பெண்களைக் குறிவைத்துப் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டு வந்ததாகவும், இதற்குத் தன் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

குறிப்பாக, கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சென்னையின் பல்வேறு பகுதிகளில், மாலை அல்லது இரவு நேரங்களில், தனியாக நடந்து செல்லும், 500க்கும் குறையாத கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களைச் சீண்டிச் சுகம் கண்டதாகக் காவல்துறையினரிடம்  சரண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதிலும் ஒரு எல்லை வகுத்துக்கொண்ட சரண் ஒரு வித்தியாசமான ஆள்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனாலும், சீண்டலில் சுகம் காண்பதைக் கைவிட்டு, இனியேனும் அவர் கட்டுப்பாட்டுடன் வாழ வேண்டும் என்பதே நம் விருப்பம்.

==========================================================================

நன்றி: https://www.kumudam.com/news/tamilnadu/29085  -Updated: Mar 02, 2021