சனி, 29 மே, 2021

உரத்த குரலில் ஊளையிடும் ஒரு கிழட்டு ஓநாய்..... ஜாக்கிறதை!!!

"தமிழக பிராமணர்கள் அச்சத்தில் உள்ளார்கள்.. ஆட்சியே இருக்காது.." பா.ஜ.க. மூத்த தலைவர் ஆவேசம்' -இது, அந்த ஓநாயின் ஊளையிடல் பற்றிய செய்திக்கு, https://tamil.oneindia.com  செய்தி நிறுவனம் தந்துள்ள தலைப்பு.

தலைப்பின் கீழ், பின்வருமாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது:

'தமிழகத்தில் பிராமணர்கள் குறி வைக்கப்படுகிறார்கள். யூதர்களை நாஜிப் படை தாக்கியதைத் தமிழகச் சூழல் நினைவுபடுத்துகிறது. எனவே, தமிழக நிலவரம் பற்றி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்குக் கடிதம் எழுதியிருப்பதாக, பாஜக மூத்த தலைவர்[பெயர் தவிர்க்கப்பட்டது] தெரிவித்துள்ளார்' 

இந்த டெல்லி வாழ் கிழட்டு ஓநாயின் இது தொடர்பான அறிவிப்பு, நேற்று[28.05.2021] இரவே 'News18 Tamil' இல் வெளியானது. அதில்.....

'தமிழ்நாட்டில் பிராமணர்களும் கோயில் பூஜாரிகளும் தாக்கப்படுகிறார்கள். அங்கே பாசிச ஆட்சி நடக்கிறது' என்பதாக இந்த ஓநாய் ஓலமிட்டிருந்தது.

சென்னை கே.கே.நகரிலுள்ள பத்மா சேஷாத்ரிப் பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது, ஆன்லைன் வகுப்பில் அரை நிர்வாணமாக வந்து நின்றது போன்ற சம்பவங்கள் தற்போது வெளியே வந்தன. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. 

பள்ளி மீதான விசாரணை மற்றும் விமர்சனங்களுக்கு ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். பிராமணர்கள் நிர்வாகத்திலுள்ள பள்ளி என்பதால் குறி வைக்கப்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர்[அண்மையில், வேறொரு பள்ளி ஆசிரியர் இதே குற்றச்சாட்டில் கைதானதை நினைவுகூர்க]. 

"பிராமணனே ஆயினும்[பிராமணர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இங்கு கௌரவமாகவே நடத்தப்படுகிறார்கள் என்பது மனசாட்சி உள்ள அத்தனைப் பிராமணர்களுக்கும் தெரியும்] குற்றம் புரிந்தவன் அவசியம் தண்டிக்கப்பட வேண்டியவனே" என்று சொல்லும் நேர்மைக் குணம் இல்லாத  சிறுமதியாளர்களுக்கு ஆதரவாக இந்த ஓநாய் உரத்த தொனியில் ஊளையிட்டிருக்கிறது.

தமிழக ஆட்சிப் பொறுப்பை ஸ்டாலின் ஏற்று ஒரு மாதம்கூட ஆகாத நிலையில், எதிரியை வீழ்த்த எந்தவொரு  கேவலமான உத்தியையும் உபாயத்தையும் கையாளத் தயங்காத இந்தக் கும்பல், மேற்கண்டவாறான குற்றச்சாட்டை முன்வைத்து, பா.ஜ.க. நடுவணரசைத் தூண்டிவிடுவதன் மூலம் ஆட்சியைக் கலைப்பதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த முயற்சி இனியும் தொடரும். டெல்லி வாழ் கிழட்டு ஓநாயின் ஊளையிடலும் தொடரும். இங்குள்ள சிறு சிறு ஓநாய்களின் ஊளையிடல் அதனோடு சேர்ந்து ஒலிக்கும் என்பதையெல்லாம் தமிழர்கள் கருத்தில் கொண்டு மிகு விழிப்புடன் செயல்படுதல் வேண்டும். இது இந்நாளைய இன்றியமையாத் தேவையாகும்.

======================================================================================

முக்கியக் குறிப்பு:

ஜெயலலிதா ஆட்சியில், இந்த ஓநாய் தமிழகம் வந்து ஏடாகூடமாக ஊளையிட்டு, அம்மாவின் தொண்டர்படைத் தாக்குதலுக்கு அஞ்சி, 'தப்பித்தேன் பிழைத்தேன்' என்று திருட்டு விமானம் ஏறி டெல்லிக்கு ஓடிய கதை உலகறிந்தது என்பதால் இதன் பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை!

=====================================================================================

மிக மிக முக்கியக் குறிப்பு:

'oneindia'வின் இந்தச் செய்திக்கான கருத்துரைகள் 489[இப்போது அதிகரித்திருக்கலாம்.

சூடு பறக்க வாரி வழங்கியிருக்கிறார்கள் வாசகர்கள். கீழ்க்காணும் முகவிரிக்குச் சென்று அவற்றையும் வாசியுங்கள்!

https://tamil.oneindia.com/news/chennai/subramanian-swamy-says-brahmins-targeted-in-tamil-nadu/articlecontent-pf553790-422296.html