செவ்வாய், 21 செப்டம்பர், 2021

கொலையில் முடிந்த முகநூல் காமம்!!!


விளாத்திகுளத்தைச் சேர்ந்த முருகன் என்பவன்[வயது 28] 'அமுதா' என்ற பெண் பெயரில் முகநூல் கணக்கு ஒன்று உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளான்.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு முருகன்[24], இந்த 'அமுதா' முருகனிடம் முகநூல் வழியாகத் தொடர்பு கொண்டிருந்தான்.

காஞ்சி முருகனிடம் விளாத்தி முருகன் அலைபேசியில், தன் பெயருக்கேற்பப் பெண் குரலில் பேசியுள்ளான். இருவரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். நட்பு காதலாக மாறியது.

இருவரும் சந்தித்து அளவளாவத் திட்டமிட்டார்கள். அதன்படி,  காஞ்சி முருகன் எட்டையாபுரம் வந்துள்ளான். நேரில் சந்தித்தபோது, தான் பேசிப் பழகிய நபர் பெண்ணல்ல, ஆண் என்பது அவனுக்குத் தெரிந்தது.

ஏமாற்றத்துடன் அவன் தன் ஊர் திரும்ப முடிவெடுத்தபோது, விளாத்தி முருகன் அவனுடன் இணக்கமாகப் பேசி, தன்னுடன் அழைத்துச் சென்றான். 

'அது'க்குத் தோதானதோர் இடத்தில் இருவரும்  ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.

அடுத்த ரவுண்டுக்கு[இரண்டுக்குமான இடைவெளி?] விளாத்தி காஞ்சியை வற்புறுத்த, அவன் மறுக்க, இருவரும் புணர்ந்து களித்த காட்சியைப் படம் எடுத்து வைத்திருப்பதாகவும், காஞ்சி முருகனின் பெற்றோருக்கு அதை அனுப்பிவிடுவதாகவும்  விளாத்தியான் மிரட்டினானாம்.

சினம் கொண்ட காஞ்சியான், விளாத்தியானைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டான்; மீண்டும் ஒரு தடவை ஓரினக் கலவிக்குச் சம்மதிப்பதாகச் சொன்னான்.

சரக்கும் குளிர்பானமும் வாங்கிக்கொண்டு இருவரும் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தைச் சுடுகாட்டுப் பகுதிக்குச் சென்றார்கள்[களவு, கொலை என இரண்டுக்குமே ஏற்ற இடம்தான்!!]

திட்டமிட்டபடி, விஷம் கலந்த குளிர்பானத்தைக் காஞ்சி முருகன் விளாத்தி முருகனுக்கு கொடுத்துள்ளான். அதைக் குடித்த விளாத்தி முருகன் மயக்கமடைந்தான்.

காஞ்சியான், அருகில் கிடந்த கல்லை விளாத்தியான் தலையில் போட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினான். அவனின் கெட்ட நேரமோ என்னவோ, கொலை செய்த இடத்தில் தன் மணிப்பர்ஸ்ஸைத் தவற விட்டுச் சென்றுள்ளான்.

இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேலக்கரந்தைச் சுடுகாட்டில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக வந்த தகவலையடுத்து மாசார்பட்டிக் காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலைக் கைப்பற்றிச் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்தார்கள். அப்பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராப் பதிவுகள் மற்றும் செல்போன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர் காவல்துறையினர்.

அதில் இறந்தவர் விளாத்திகுளம் அருகே உள்ள மேலஈரால் பகுதியைச் சேர்ந்த முருகன்(28) என்பதும், அவனைக் கொலை செய்தவன் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியைச் சேர்ந்த இன்னொரு முருகன்[24] என்பதும் தெரியவந்தது.

காஞ்சி முருகன் தனது வீட்டிற்குச் சென்றபோது தன்னுடைய மணிபர்ஸ்சைத் தவறவிட்டு வந்ததை அறிந்து, அதை எடுப்பதற்காக மறுநாள் எட்டயபுரம் அருகே உள்ள மேலக்கரந்தை சென்றபோது அவனைத் தனிப்படைப் போலீசார் கைது செய்தனர்.

முகநூல் நட்பு காதலாகி, காமமும் ஆகி, ஓரினச் சேர்க்கைக்கு உந்தித் தள்ள, அந்த அசிங்கம் அரங்கேறியிருக்கிறது. அப்புறம் அதுவே ஒரு கொலைக்கும் காரணமாகிவிட்டது.

எவரேனும், இதைப் போன்ற பரபர முகநூல் காமக் கதைகளைக் குறும்படமாகத் தயாரித்து 'யூடியூப்'இல் வெளியிட்டால்[முகநூலில் தொடராகவும் எழுதலாம்], காதல் கத்தரிக்காய் என்று புத்திகெட்டு அலையும் இளவட்டங்கள் கொஞ்சமேனும் பாடம் கற்பார்கள் என்பது உறுதி.

====================================================================================

நன்றி: https://www.bbc.com/tamil/topics/c9wpm0exkdpt  -20 செப்டெம்பர் 2021