பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 31 ஜூலை, 2022

முப்பது வயதுக் காமுகியும் பதினைந்து வயதுப் பள்ளிச் சிறுவனும்!

ஸ்வப்னா[30 வயது]வுக்கு 4 குழந்தைகள். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் 'குடிவாடா குட்மேன்' பேட்டையில் வசிப்பவர் இவர். நோய்வாய்ப்பட்ட கணவன் வேறு எங்கோ[?] 4 குழந்தைகளுடன் வசிக்கிறார்.

தனிமையில் இன்பசுகம் காணும் வழிவகை அறியாமல் தவித்துவந்தார் ஸ்வப்னா. 

வீட்டிற்குத் தொ.கா. பார்ப்பதற்காகப் பக்கத்து வீட்டு 15 வயதுச் சிறுவன்[8ஆம் வகுப்பு மாணவன்] வந்துபோவது வழக்கம்.

மீசை முளைக்காத அந்தச் சிறுவனின் மூலம் தன் தாபத்தைத் தணித்துக்கொள்ளத் திட்டம் தீட்டினார்  ஸ்வப்னா[அனுபவசாலிகளுடன் தொடர்பு கொண்டால் அக்கம்பக்கத்தார்க்குத் தெரிந்துவிடும் என்று அவர் பயந்திருக்கக்கூடும்!]. 

யோசித்தார்; அவனை ஆபாசக் காணொலிகள் பார்க்க வைத்தார்.

சிறுவனின் மனதில் பாலுறவு ஆசை சுரந்தது. அவன் மூலம் அந்தரங்கச் சுகம் அனுபவித்தார். சுகத்தில் திளைப்பது தொடர்ந்தது.

கத்துக்குட்டிச் சிறுவன் மூலம் பெற்ற சிற்றின்பம் அவருக்குக் 'கட்டுபடி' ஆனதா என்பது தெரியவில்லை; கிடைத்தவரை போதும் என்று திருப்தி கண்டிருக்க வேண்டும். 

நாலு பேருக்குத் தெரியாமல் நான்கு சுவருக்குள் சல்லாபித்தது போதும் என்று இருந்திருக்கலாம். அவருடைய கெட்ட நேரமோ என்னவோ, சிறுவனுடன் ஐதராபாத்துக்குச் சென்று விடுதியில் அறை எடுத்துத் தங்கிக் காமக் களியாட்டத்தில் நாட்களைக் கடத்தினார்.

இருவரும் ஒருசேரக் காணாமல் போனதை வைத்து, ஸ்வப்னாவைச் சந்தேகித்த சிறுவனின் தந்தை காவல்துறையில் புகார் செய்தார். துப்பறிந்து ஸ்வப்னாவையும் சிறுவனையும் கண்டுப்பிடித்த போலீஸ்காரர்கள், சிறுவனுக்குப் புத்தி சொல்லிப் பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள்; ஸ்வப்னாவை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்[ஆதாரம்:  https://www.dinakaran.com/news_detail.asp?Nid=787311].

*** ஸ்வப்னாவின் இடத்தில் ஒரு சுப்பண்ணாவை இருத்தி, அவர், மனம் பக்குவப்படாத 15 வயதுச்  சிறுமியைத் தன்வசப்படுத்தி வன்புணர்வு செய்ததாகக் கற்பனை செய்யுங்கள்; சிந்தியுங்கள்.

சிறுமியின் எதிர்காலம்?

திருமணம் ஆவது குதிரைக் கொம்பு. மனநிலை சிதைவதற்கு நிறையவே வாய்ப்பு இருப்பதால், நிறையப் படித்துத் தேர்ந்து ஒரு வேலை தேடிக்கொள்வது சாத்தியமில்லை.

வசதி படைத்த எவனுக்கெல்லாமோ வைப்பாட்டியாகவோ, உடம்பை விலைபேசி வயிறு வளர்ப்பவளாகவோ காலம் தள்ள வேண்டியதுதான்; கௌரவமான வாழ்க்கை வாழ்ந்திட வழியே இல்லை. 

இவளை இந்த அவல நிலைக்கு ஆளாக்கியவனுக்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் நமக்கு வழங்கப்பட்டால்.....

'அவனை நடுத்தெருவில் வைத்துக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்'; 'தூக்கிலிட வேண்டும்' என்பன போன்றவை நம் தீர்ப்பாக இருக்கும்.

அதிகாரம் வழங்கப்படவில்லை என்றால், குறைந்தபட்சம், அவனின் விரைகளை அகற்றி ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என்றொரு கோரிக்கையாவது வைப்போம்.

ஒரு சிறுமியை வன்புணர்வு செய்தவனுக்கு, விரை நீக்கம் செய்வது ஏற்கத்தக்கக்  குறைந்தபட்சத் தண்டனை என்றால்.....

சிறுவனின் மனதில் காம உணர்வைக் கிளர்ந்தெழச் செய்து வன்புணர்வு செய்து, பிஞ்சில் பழுக்க வைத்து, அவனின் எதிர்காலத்தை[ஓட்டல்களில் எச்சில் இலை எடுத்துப் பெஞ்சு துடைக்கலாம்]ச் சிதைத்த ஸ்வப்னா போன்ற பெண்களுக்கான குறைந்தபட்சத் தண்டனை என்ன?

எளிதில் விடை காண இயலாத கேள்வி இது!

===========================================================================