அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 28 செப்டம்பர், 2022

சத்குருவா, சத்துருவா?!?!

ஜக்கியின் விதிகளை மீறிக் கட்டடங்கள் கட்டிய வழக்கில், 2014 சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு[கல்வி நோக்கத்திற்காகக் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளனவாம்!!!] விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நடுவணரசு தெரிவித்தது. அப்போது நீதிபதிகள், சட்டத்தை உருவாக்கிவிட்டுப் பின்னர் அதிலிருந்து விலக்கு அளிப்பதா என மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியதுடன், ஈஷா அறக்கட்டளையின் கட்டடங்கள் எவ்வாறு விலக்கு அளிக்கும் பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்டன என விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ((செப்டம்பர் 28))தள்ளிவைத்தனர் -இது, 27.09.2022 செய்தி.

தியான மண்டபம் கட்டியது, பிரமாண்ட ஆதியோகி சிலையை நிறுவியது, பல கட்டடங்களைக் கட்டியது, தனக்குத்தானே சத்குரு[கடவுளின் குரு] என்று பட்டம் சூட்டிக்கொண்டது என்று ஜக்கி செய்த அத்தனை காரியங்களும் தன்னைக் கடவுள் அவதாரம் என்று நம்ப வைப்பதற்காகவே.

யோகா, தியானம் என்று சொல்லிக்கொண்டு கற்பனை செய்ய இயலாத அளவுக்குக் கட்டணங்கள் வசூலித்துக் கோடீஸ்வரன் ஆனவர் இந்த ஜக்கி என்னும் சாமியார்.

இந்த ஆள் கல்விக்குச் செய்த சேவை என்று எதுவுமே இல்லாதபோது, நடுவணரசு விதிவிலக்கு அளித்ததன் பின்னணி என்ன?

இதைத்தான் நீதியரசர்கள் கேட்டிருக்கிறார்கள்.

விதம் விதமாய் அதீத ஆடம்பர உடை உடுத்து, ஹெலிகாப்டர், சொகுசுக் கார் என்று விலையுயர்ந்த வாகனங்களில் உலகம் சுற்றும் இந்த நபரை மோடி அவர்களின் தலைமையிலான அரசு ஆதரிப்பதற்கான உண்மைக் காரணம்தான் என்ன?

என்னுடைய இந்தக் கேள்வியில் உள்நோக்கம் ஏதுமில்லை. இந்த நாட்டின் உண்மைக் குடிமகன் என்ற வகையில் உண்மை அறியும் ஆர்வம் மட்டுமே காரணம்.


இந்தப் படத்தை ஒருமுறை ஊன்றிக் கவனியுங்கள்.

ஜக்கி இருக்கும் இடத்தில் யாரேனும் ஓர் அரசியல் தலைவர் இருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். ஊடகக்காரர்கள் எப்படியெல்லாமோ அவர் பெயருக்குக் களங்கம்  கற்பித்திருப்பார்கள்தானே?[மற்றபடி, இப்படம் குறித்து நாம் தவறாக விமர்சனம் ஏதும் செய்யவில்லை].

தன்னை யோகி, ஞானி, அவதாரம் என்று பீற்றிக்கொள்ளும் இந்த நபர், நவராத்திரி விழா என்று சொல்லிக்கொண்டு அழகிகளுடன் ஆட்டம் பாட்டம் என்று ஆண்டுதோறும் ஆர்ப்பாட்டம் செய்கிறாரே, இதற்காகத்தான் மத்திய அரசு இவருக்கு விதிவிலக்கு அளித்ததா?

எந்த அடிப்படையில் இவரை நடுவணரசு தாங்கு தாங்கென்று தாங்குகிறது?

இன்னும் கேட்கலாம்.

அதற்கான 'தில்' வெகு சாமானியனான 'பசி'பரமசிவத்திற்கு இல்லை.

எனவே, நாம் காத்திருப்பது நீதியரசர்களில் நடுநிலையான தீர்ப்பை அறிவதற்காக மட்டுமே.

                                         *   *   *   *   *

https://tamil.oneindia.com/ செய்திக்கான வாசகர் பின்னூட்டங்கள்[திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை]:

 

கற்பழித்து விட்டுத் திருமணம் செய்து கொண்டால், அது சட்டப்படி சரி என்று சொல்வது போல் கைவிட்ட ஜீயின் ஒன்றிய அரசு ஆக்கிரமிப்புப் போலி நிறுவனச்சாமியாருக்கு ஆதரவு .

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள். ஜீயிடம் நீதி எப்படி எதிர்பார்க்கமுடியும்: ஜசோ

அது ஒரு வியாபார நிறுவனம் , ஆன்மிக வியாபாரமும் நடக்கும் இடம் .. ஜக்கி எப்பவுமே சட்டத்தை மதிக்கறதில்லை

All politicians, Judges and Executives will listen to his words. Nothing can be done against him. Govt of India can rename that entire forest as Jaggi forest. Even elephants should take his permission to roam around for food.

கல்வி நோக்கத்திற்காகவும், மாணவர் விடுதிக்காகவும் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டுமென்ற விதியிலிருந்து ஈஷா அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது// இதைவிட கொடூர நகைச்சுவை வேறொன்றும் இருக்கமுடியாது.

கல்விக்காக கட்டிடம் கட்டி:: கல்விக்காக வா இல்லை கலவிக்கு ஆக கட்டிய இடமா , சரி அப்போ கல்விக்காக கட்டிய இடத்தில சிவராத்திரி அன்று 2 லட்சம் என்று எல்லாம் வசூல் எப்படி செய்யலாம் இதை கோர்ட் கவனத்தில் கொள்வதோ

சூஊப்பர் !!!இனிமேல் மலைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து கல்விக்காக கட்டிடம் கட்டியதாக சொல்லிவிட வேண்டியதுதான் !!!! சூஊஊஊப்பர் !!!!!!!

Mani

இதென்னடா நூதன திருட்டா இருக்கு. அந்த பரதேசிப்பய கல்விக்கு கட்டலடா கலவிக்கு கட்டினான்.

ஜிக்கிபாசுதேவ் கஞ்சாவை மூலிகையாக நினைத்து பயிரிட்டதால், தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது - பொத்திய அரசு

magi

தேவைக்கு சட்டத்தை வளைத்துக்கொள்ளலாம் என்று ஒன்றியம் சொல்லவருதா என்று புரியமாட்டேங்குது .

இனிமேல், இஷ்டம் போல வளைச்சி போட்டுட்டு, வெளியே பேருக்கு ஒரு போர்டுக்கு வெச்சிட்டு.
இங்கேய பாடம் சொல்லி தரப்படும்னு கரும் பலகை வெச்சிட்டா யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க, கேள்வி கேக்க கூடாது.

உங்க வீடு உருட்டு, எங்க வீடு உருட்டு இல்ல, இதுக்கு பெரு தான் உலக மகா உருட்டு.

===========================================================================

[https://tamil.oneindia.com/news/coimbatore/isha-coimbatore-case-it-does-not-need-any-clearance-says-union-govt-in-mhc/articlecontent-pf771450-477847.html]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக