எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 30 செப்டம்பர், 2022

பெண் உருவில் ஓர் ஆபாச 'ஐஏஎஸ்' அதிகாரி!!!

பீகார் மாநிலம், பாட்னா நகரில், 'மகளிர் & குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம்' சார்பாக, 'அதிகாரம் பெற்ற மகள்கள், வளமான பீகார்' என்னும் தலைப்பில் 9&10ஆம் வகுப்பு மாணவியருக்கான கருத்தரங்கம் நடைபெற்றது.

'ஹர்ஜோத் கௌர் பம்ரா' என்பவர் தலைமை தாங்கிக் கலந்துரையாடினார்[இவர்தான் மேற்கண்ட அமைப்பின் இயக்குனர்]  இவர் IAS பட்டம் பெற்ற அதிகாரி.

மாணவிகள் கேள்விகள் கேட்க அனுமதிக்கப்பட்டார்கள்.

'ரியா குமாரி' என்னும் மாணவி, "ரூ20-30 விலையுள்ள சானிடரி நாப்கின்களை மாணவிகளுக்கு அரசு இலவசமாக வழங்குமா?" என்று கேட்டுள்ளார்.

இதற்கு, அந்தத் தறுதலை 'ஹர்ஜோத் கௌர் பம்ரா' அளித்த பதில் என்ன என்பதை அறிந்தால் அதிர்ந்துபோவீர்கள். அது மட்டுமல்ல, அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் அவர் மீது எச்சிலைக் காறித் துப்புவீர்கள்.

அவர் சொன்ன பதில்.....

"இப்போது நாப்கின் கேட்கிற நீங்கள் அடுத்து ஜீன்ஸ், காலணி, ஆணுறை எல்லாம் கேட்பீர்கள்."

மாணவி,  "எனக்கு வசதி உள்ளது. தேவையான நாப்கினை நானே வாங்கிக்கொள்வேன். நான் கேட்டது வறுமையில் வாடுகிற ஏழை மாணவிகளுக்காக" என்று அவருக்குப் பதிலடி கொடுத்ததோடு, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் கடமை இது" என்று சொல்லியிருக்கிறார்.

அதற்கு அந்தக் கழிசடை, "நீங்களெல்லாம் வாக்களிக்க வேண்டாம்" என்று திமிராகப் பதில் தந்திருக்கிறது.

அவரின் இந்த ஆபாசப் பேச்சுக்கு, தேசிய மகளிர் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.https://www.nakkheeran.in/24-by-7-news/india/girl-who-asked-napkin-girl-who-spoke-rudely-ias-officer

அடியேனுக்கு வழக்கம்போல இங்கும் ஒரு சந்தேகம் எழுவதைத் தவிர்க்க இயலவில்லை. அது.....

'ஹர்ஜோத் கௌர் பம்ரா' என்னும் அசிங்கப் பெண் அதிகாரி, பள்ளி மாணவியாக இருந்தபோதே 'ஆணுறை' பயன்படுத்தியிருப்பாரோ? 

ஹி... ஹி... ஹி!!!