ஞாயிறு, 13 நவம்பர், 2022

காமக் காணொலி காண்போரின் கனிவான கவனத்திற்கு!!![பகிர்வு]

கேள்வி[quora.com]:

'நிஜ வாழ்வில் தம்பதிகள் கொள்ளும் தாம்பத்திய உடலுறவுக்கும், ஆபாசக் காணொளியில் இடம்பெறும் உடலுறவுக்கும் இடையிலான ஒற்றுமை வேற்றுமைகள் என்னென்ன? தற்காலச் சந்ததிகளை மனதில்கொண்டு விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்[quora.com].

பதில் அளித்தவர்: 'மழைத் துளி'[புனைபெயர்], விவசாயத் திணைக்களம்-இல் விவசாய போதனாசிரியர் (2018–தற்போது வரை)நவ. 7

நீங்கள் ஆபாசக் காணொளிகளைப் பார்த்து அவற்றை உண்மை என்று நம்பி விட்டீர்களோ தெரியவில்லை. அவை, உங்களுடைய காமத்தைத் தூண்டவேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அதாவது.....

நீங்கள் காணும் ஒரு நிமிடக் காட்சி மிகப் பல முறை மீண்டும் மீண்டும் படப்பிடிப்பு(Retake) நடத்தப்பட்டு, இயக்குனருக்குத் திருப்தி ஏற்பட்டால் மட்டுமே வெளியிடப்படுகிறது.

பின்னர் பின்னணிக் குரல் சேர்க்கப்பட்டு, நன்றாகத் திருத்தம்[Edit] செய்யப்பட்ட பிறகே நம் பார்வைக்கு வருகிறது. நாமோ அதை, இயல்பாக நடந்த உண்மை நிகழ்வு என்று நம்பி அதனோடு ஒன்றிப்போய், உணர்ச்சிவசப்பட்டு மனதைக் கெடுத்துக்கொள்கிறோம். எதார்த்த வாழ்க்கையில் அது போல் புணர்வது என்பது சாத்தியமே அல்ல.

படப்பிடிப்பின்போது நடிக நடிகைகளின் உணர்ச்சிகளைத் தூண்டுவதற்காகப் போதைப் பொருள் பாவிக்கப்படுவதும், அதிகப் போதைப் பாவனையால் நடிகைககள் இறந்துவிடுவதும் நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூரங்கள் ஆகும்.

அவர்கள் முழுக்க முழுக்க அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள். படங்கள் ஈட்டும் வருமானத்தோடு ஒப்பிடும்போது அவர்கள் பெறும் ஊதியம் மிகவும் குறைவு[விதிவிலக்கானவர்கள் உண்டு].

இங்கே பெரிதும் கவனத்தில் கொள்ளத்தக்கது என்னவென்றால், இடைவெளிவிட்டு எடுக்கப்படும் காட்சிகள் இணக்கப்பட்டே காணொளி வெளியிடப்படுகின்றது. அதனால், நெடுநேரத்துக்கு ஆண் குறி எழுச்சி பெற்ற நிலையில் இருப்பதாக நாம் நம்பி ஏமாறுகிறோம். நமக்கு அது சாத்தியப்படவில்லையே என்று கவலைப்படுகிறோம். இது நாம் செய்யும் மிகப் பெரிய தவறு.

ஆண்களைப்[சராசரி] பொருத்தவரை, பெண்ணுறுப்புடன் இணையும்போது, ஆணுறுப்பின் எழுச்சி நீடிப்பதற்கான நேரம் மிகச் சில நிமிடங்களே. அதில் மனநிறைவு பெற இயலாத நிலையில்தான் அதற்கான நேரத்தை நீட்டிக்க விரும்புகிறோம். அதற்கான வழி, ஒரு பாலியல் மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதுதான். அதிக அளவில் தீங்கு விளைவிக்காத மாத்திரைகளையோ, களிம்புகளையோ அவர் பரிந்துரை செய்வார்.

இது விசயத்தில், கணவனும் மனைவியும் மனம்விட்டுப் பேசி, முன்விளையாட்டு, புணர்ச்சிக்கான நேரம் ஆகியவற்றை முடிவு செய்து, முழுப் புரிதலுடன் இணைந்து இன்புறுதலே நல்லது. "இது போதும்" என்று திருப்திகொள்ளும் மனப் பக்குவம் இருவருக்கும் தேவை.


ஆக, ஆபாசக் காணொளிகளைப் பார்ப்பதால், பார்ப்பவர் காம வெறி பிடித்த மிருகமாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

எனவே, இளைஞர்களுக்கு நாம் சொல்ல விரும்புவது, ஓரிரு முறை அதைப் பார்த்திருந்தால் அத்துடன் அந்தப் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என்பதே.

===========================================================================