அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 2 ஜூலை, 2023

பக்தி வளர்க! பக்தர்கள் வாழ்க! மதங்கள் வாழ்க! கடவுளும் வாழ்க வாழ்கவே!!

“கர்த்தரின் நாமத்தை ஜெபியுங்கள், அவர் கருணை காட்டுவார்” என்கிறது கிறித்தவம்.

“அபயக் குரல் எழுப்புவீர் ஆபத்பாந்தவன் கிருஷ்ணன்[மற்றக் கடவுள்களும்தான்] ஓடோடி வருவான்” என்கிறது இந்துமதம்.

“அல்லல்களையும் துன்பங்களையும் துயரங்களையும் கிள்ளி எறிபவன் அல்லா” என்கிறது இஸ்லாம் மதம்.

நீங்கள்[பக்தர்] இந்த மூன்றில் ஒன்றையோ மூன்றையுமோ, இன்னும் பல மதங்களையோ சார்ந்து வாழ்பவராக இருந்தால்.....

நீங்கள் வாழ்க! உங்களின் மதங்களும் வாழ்க! மதங்கள் போற்றும் கடவுள்களும் வாழ்க! வாழ்கவே!!

உங்களின் வருகைக்கு நன்றி! கீழ்க்காணும் கதையையும் நீங்கள் வாசித்திட வேண்டும் என்பது என் கோரிக்கை.

                                     *   *   *   *   *

கதை: ‘சுமக்கப் பிறந்தவர்கள்’

யிற்றுப்பாட்டுக்காகத் தானிய மண்டியில் மூட்டை சுமப்பவன் 'X'[பெயர் வேண்டாம்].

அவன் அன்று, சாலையில் நடந்துகொண்டிருந்தபோது, சொகுசுக் கார் ஒன்று, ஒரு பள்ளிச் சிறுவனை மோதித் தள்ளிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதைக் கண்டான்.

ரத்தக் காயங்களுடன் கிடந்த சிறுவனை, ஒரு ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனை ஒன்றில் சேர்த்தான்; அடையாள அட்டையிலிருந்த தொ.பே.எண்ணுக்குத் தொடர்புகொண்டு அவனின் பெற்றோரை வரவழைத்தான்.

மருத்துவரைச் சந்தித்துத் திரும்பிய சிறுவனின் தந்தை, நம் Xஐச் சந்தித்து, “பத்து நிமிசம் தாமதம் ஆகியிருந்தா உங்க புள்ளையைக் காப்பாத்தியிருக்க முடியாதுன்னு டாக்டர் சொன்னார். கடவுளா பார்த்து உங்களை அனுப்பியிருக்கார். ரொம்ப நன்றிங்க” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி Xஇன் கரங்களைத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டார்.

“என் பத்து வயசுப் பொண்ணு காணாம போயி ரெண்டு வருசம் ஆச்சு. சின்னஞ்சிறு குட்டிகளைக் கடத்துறதும், கற்பழிச்சிச் சிதைச்சிக் கொலை பண்ணுறதும் அடிக்கடி நடக்குது. “என் செல்லம் என்ன ஆனாளோ”ன்னு அழுது துடிச்சா என் பெண்டாட்டி. அல்லா, கர்த்தர், ஆதியோகி, சிவ யோகி, கிருஷ்ண பரமார்த்தா, விநாயகனார், முருகனார்னு தனக்குத் தெரிஞ்ச சாமிகளையும், அறிமுகம் இல்லாத அத்தனை சாமிகளையும் வேண்டிகிட்டா. எந்தச் சாமியும் உதவ முன்வரல. தினம் தினம் வேதனைப்பட்டுப் பட்டுப் பட்டுப் பட்டினி கிடந்து செத்துப் போனா. நான் நடைப் பிணமா வாழ்ந்துட்டிருக்கேன். நீங்க புண்ணியம் செஞ்சவங்க. கேட்காமலே கடவுள் என்னை அனுப்பி உங்களுக்கு உதவியிருக்கார். உங்களைக் கெஞ்சிக் கேட்டுக்கிறேன், கடவுளைக் கருணை காட்டச் சொல்லுங்க. என் மகளைக் கண்டுபிடிச்சித் தரச்சொல்லி வேண்டிக்கிங்க ஐயா.” -கண்களில் கண்ணீர் பெருக, நா தழுதழுக்கச் சொன்னான் X.

சற்று நேரம் செய்வதறியாது திகைத்த சிறுவனின் தந்தை, Xஇன் தோள் தொட்டு, “வேண்டிக்கிறேன். நீங்களும் உயிருள்ளவரை வேண்டிகிட்டே இருங்க. கடவுள் கருணை காட்டுவார்” என்று சொல்லி இடம்பெயர்ந்தார்!

* * * * *

இந்தக் கதை[2014], அதிபிரமாண்டமான மகா மகா மகாப் பெரிய ‘பானை’ச் சோற்றில் ஒரு சோறு மட்டுமே!

* * * * *