பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 17 ஆகஸ்ட், 2023

தமிழ் வளருது... வளருது! மோடியால் வளருது!!

 


பிரதமர் மோடி சிலை

Government & Politics

ண்ணாமலையாரின்[பாஜக] நடைப்பயணத்தில், ‘மோடி’யாரின் ஊர்ந்து செல்லும் பிரமாண்ட சிலை, சூழ்ந்து நின்று வேடிக்கை பார்க்கும் மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளதாம்.


‘மோடி உருவச்சிலை எழுந்து நிற்பது போன்றும், தலையை இரு பக்கமும் திருப்பிப் பார்த்துக் கையை அசைப்பது போன்றும் மின் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது. அந்தச் சமயத்தில் பிரதமர் மோடியின் இந்தி உரை ஒலிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது’ன்பது சில மணி நேரங்களுக்கு முன்னரான செய்தி[https://www.vikatan.com/government-and-politics/politics/modi-statue-in-annamalai-kanniyakumari-walk]


மோடிஜி, உடற்பயிற்சி, யோகா எல்லாம் செய்து தன் உடம்பைக் கட்டாக வைத்திருக்கிறார் என்பது உலகறிந்த செய்தி.


உலக அளவில் உலா செல்லும் இடங்களில் எல்லாம், “தமிழ் மிகப் பழமையானதொரு மொழி; மிக மிக மிக மிக மிகச் சுவையான தேனினும் இனிய மொழி; இதை நான் என் உயிரினும் மேலாக நேசிக்கிறேன்’ என்பதுபோல் தமிழுக்குப் புகழ்மாலை சூட்டவும் அவர் தவறுவதே இல்லை.


இப்படிப் பேசிப் பேசிப் பேசியே அத்தனைத் தமிழர்களின் உள்ளங்களையும் கொள்ளைகொண்டுள்ளார் என்பது நாமனைவரும் அறிந்ததே[நீங்கள் எப்படியோ, அடுத்த தேர்தலில் என் வாக்கு ‘பாஜக’வுக்குத்தான்].


இப்போது மேற்கண்ட செய்தியின் கடைசி வரியை மீண்டும் வாசியுங்கள்.


வாசிப்பின் மூலம், அவரின் இந்தி உரை ஒலிபரப்பாகும் வகையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து[இது தமிழ்நாடு என்பதால், தமிழில் “வணக்கம்” சொல்லி ஆங்கிலத்தில் பேசுவதாக, சிலையை வடிவமைத்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள்] பேரதிர்ச்சிக்கு உள்ளாகாதீர்.


காரணம், தமிழின் மீது மோடி கொண்டுள்ள பற்று கிஞ்சித்தும் கறைபடியாதது.


அவர் இந்தியில் உரையாற்றுவதுபோல் சிலை கட்டமைக்கப்பட்டிருப்பது…..


நடுவணரசில் தனக்கு அமைச்சர் பதவி தரவில்லை என்பதால் மனம் நொந்துபோன, தலைவர் அண்ணாமலையாரின் ‘உள்குத்து’ வேலை இது என்பதை அறிவீராக!


வாழ்க மோடி! ‘என்றுமுள தமிழ்’ போல வாழ்க!!