அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 5 அக்டோபர், 2023

இந்தக் காட்டுமிராண்டிகளை[சு.சாமி உட்பட]க் கடலில் தள்ளுவதா, நாடு கடத்துவதா?!

சுமார் 1 பில்லியன்[100 கோடி] ஆண்டுகளுக்கு முன்பு உயிரினங்கள் தோற்றம் பெற்றதாக அறிவியலறிஞர்கள் சொல்கிறார்கள். 

வால் இல்லாத மனிதக் குரங்குகள் நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின என்று அறிவியல் துறை கணித்திருக்கிறது.

பத்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு ஆதி மனிதன் தோன்றினான் என்றும் அது அனுமானித்திருக்கிறது [விக்கிப்பீடியா].

50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித இனத்தின் அறிவிலும் திறனிலும் ஒரு திடீர் உயர்வு தோன்றியது. கருவிகள் மேன்மேலும் செம்மையும் செயல்திறனும் பெற்றவையாக உருவாக்கப்பட்டன. வாழ்க்கை முறையில் சிரமம் குறைந்தது. ஓய்வு நேரம் கூடியது. வாய்மொழியாக இசையைப் பாடுவதும் கருவிகளைக் கொண்டு வாசிப்பதும் உருவானது. மக்கள்தொகை பெருகியது['இந்து தமிழ்'].

ஆக, மனிதனின் சிந்திக்கும் அறிவு[ஆறாம் அறிவு] வளர ஆரம்பித்ததே 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் என்று அறிவியலாளர்கள் உறுதி செய்திருக்க.....

தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும்[ஸ்ரீலங்கா] இடையில் அமைந்துள்ள மணல் திட்டை, ராமன்[கடவுள் அவதாரம்] கட்டிய பாலம் என்றும், அது பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என்றும் ராமப் பக்தப் புளுகர்கள் பரப்புரை செய்துவரும் நிலையில்,[இதனால் சேது சமுத்திரத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுக் கைவிடப்பட்டது] அவர்களில் ஒருவரான[அசோக் பாண்டே] என்பவர்.....

பாலத்தை இரு கண்களாலும் பார்த்துப் பார்த்துக் கழிபேருவகை கொள்ளும் வகையில் மிக உயரமான சுவர் எழுப்ப வேண்டும் என்று இந்திய உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்[https://ibctamil.com/article/rama-bridge-judgment-of-supreme-court-of-india-1696393365].....

இராமர் பாலத்தைச் தேசியப் புராதானச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பாரதீய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி உள்ளிட்டப் பலர் வழக்குத் தொடுத்திருந்தனர் என்பதும் அறியத்தக்கது.

மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர்கள், “கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதில் தலையிடுவது எல்லாம் நீதிமன்றத்தின் பணியா?” என்று கேள்வி எழுப்பி மனுவைத் தள்ளுபடி செய்தார்கள் என்பது [மகிழ்வூட்டும்]செய்தி.

பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, தெய்வீகப் பிறவியான ராமன் என்பவன் இந்த நாட்டை ஆண்டான்; பாலம் கட்டினான் என்பது மக்களை மூடர்கள் ஆக்குவதோடு நீதியரசர்களின் நேரத்தை விரயம் ஆக்குவதும் ஆகும்.

நேரத்தை வீணடித்ததற்காக, அந்த ஆறறிவு முட்டாளுக்கு அபராதம் விதித்திருக்கலாம்.

அதைவிடவும்.....

மனிதர்களைக் காட்டுமிராண்டிகளாக ஆக்க முயலும் இவரையும், இவரைப் போன்ற ஆதி மனிதன்களை, இவர்கள் ராமன் பாலம் இருப்பதாகச் சொல்லும் சேது சமுத்திரத்தில் மூழ்கடிக்கும்படியோ, அது சட்ட விதிப்படி சாத்தியம் இல்லையென்றால், குறைந்த பட்சம் நாடு கடத்தும்படியோ ஆணை பிறப்பித்திருக்கலாம்.

அது நம் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதற்கு உறுதுணையாக அமைந்திருக்கும்!

* * * * *