அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 5 நவம்பர், 2023

‘ஹலால்’...மந்திரம் ஓதுதலும் ஆசீர்வதித்துக் கொல்லுதலும்!!!

ஹலால் முறையில் விலங்குகளை வெட்டுவதற்கு முன்பாக இஸ்லாமிய மதச் சடங்கை அறிந்த இஸ்லாமியர் ஒருவர், தங்கள் மத நூலான குர் ஆனில் விலங்குகளைப் பலியிடுவதற்கு முன்பாகக் கூறப்படும் பிரார்த்தனை மந்திரத்தை ஓதி, அவ்விலங்கை இறைவனின் பெயரால் ஆசிர்வதிப்பார்{‘ஹலால்’ என்பதன் பொருள்[Halal... ‘ஹலால்’ என்பது அரபு மொழி வார்த்தையாகும்]. இஸ்லாமிய மத நூலான “குர்ஆன் அனுமதிக்கின்ற முறை” என்கிறார்கள் இஸ்லாமியர்கள்}.

அவர் ஆசி வழங்கி முடித்ததும், கசாப்புக் கடைக்காரர் அந்தக் கால்நடையின் கழுத்தை மிகக் கூர்மையான ஆயுதத்தால். அது வலியை உணராதவாறு[???] அறுப்பார்…..[https://dheivegam.com/halal-meaning-in-tamil/].

இதன் மூலம்.....

உயிர்களைக் கொல்லும்போது, கொல்லுபவர் மனதில் கருணை பொங்கி வழிய அதைச் செய்கிறார் என்பதை அறிகிறோம்.

ஆக, இஸ்லாமியர்கள், பிரார்த்தனை மந்திரம் ஓதிக் கொல்லும் முறையைப் பின்பற்றுகிறார்கள் என்பது பெரிதும் போற்றுதற்குரியதாகும்.

விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடும்போது பிரார்த்தனை மந்திரம் சொல்ல வாய்ப்பில்லாததால் அவர்கள் அதைச் செய்வதில்லை என்று நம்பலாம்[?].

மேலும், எதிரிகளுடன் போரிட நேரும்போது இவர்களால் கொல்லப்படும் மனிதர்கள், இவர்கள் ஆறறிவாளர்கள் என்பதால், பிரார்த்தனை மந்திரம் சொல்லாமல் கொல்லப்படும் உயிரினங்களைவிடவும்[விலங்குகள், பறவைகள்] அதிக அளவில் வேதனையை அனுபவிப்பார்கள் என்பதால், கல்லால் அடித்தோ, துப்பாக்கியால் சுட்டோ, குண்டுகளை வெடித்தோ, ஏவுகணைகளை வீசியோ எதிரிகளைக் கொல்லும்போதும் பிரார்த்தனை மந்திரம் ஓதுவார்கள் என்று நம்பலாம்[ஒரு நம்பிக்கைதான். ஆதாரம் ஏதும் கைவசம் இல்லை].

இது பாராட்டுக்குரிய உயர் பண்பு என்பதால், பிற மதத்தவரும் தத்தம் எதிரிகளோடு மோதும்போதெல்லாம்[கலவரம் & போர் நிகழ்வுகள்] அருளுள்ளத்துடன் ‘பிரார்த்தனை மந்திரம் ஓதுதல்’ நெறியைத் தவறாமல் பின்பற்றுதல் வேண்டும் என்பது நம் பரிந்துரை.

* * * * *