சனி, 11 மே, 2024

விஞ்ஞானிகளை மருட்டும் ஓர் அஞ்ஞானி!!!

‘பிரபஞ்சம்[கோள்களையும் நட்சத்திரங்களையும் பிறவற்றையும் உள்ளடக்கியது] என்பது ஒரு புள்ளியிலிருந்து ஒரு பெரிய பெருவெடிப்பின் மூலம் உருவாயிற்று’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அன்றிலிருந்து இது விரிவடைந்துவருகிறதாம்.

இது விரிவடைகிறது என்றால், இதற்கு ‘விளிம்பு’ இருந்தாக
வேண்டும்.

விளிம்புக்கு அப்பால் எதுவும் இருப்பது உறுதி. அந்த ‘எதுவும்’ எப்படியிருக்கும்?

எதுவும் இல்லை என்றால், விளிம்புக்கு அப்பால் இருப்பது வெற்றிடமா?placeholderTheSimplySpace> ஆங்கில மூலம் கீழே*** இடம்பெற்றுள்ளது.

நம் சந்தேகம்:

‘விளிம்பு’ம், அதற்கு அப்பால் ‘எதுவும்’ இருந்தாக வேண்டும் என்பது வெறும் அனுமானங்களே; ஆதாரங்கள் இல்லை[விரிவடைவதால் விளிம்பு இருந்தாக வேண்டும் என்று நம்புகிறார்கள்].

இந்நிலையில்.....

“தோற்றம், விரிவடைதல், விளிம்பு, எல்லை, கனபரிமானம் என்று எந்தவொன்றும் தேவைப்படாமல், எக்காலத்தும் பிரபஞ்சம் இருந்துகொண்டே இருக்கிறது. இதனுள்ளேதான் பெரு வெடிப்பு, சிறு வெடிப்பு நிகழ்வுகள் எல்லாம்” என்று சொல்லத் தோன்றுகிறது நமக்கு.

அறிவியல் ஆதாரம் ஏதுமற்ற அனுமானம் இதுவாகும்.

போதிய அளவுக்கு அறிவியல் கற்கவில்லையே என்னும் ஆதங்கத்தின் வெளிப்பாடு இது.

“அன்பு கொண்டு வாசித்து நகருங்கள்; நகைக்க வேண்டாம்” என்பது அடியேனின் அன்பான வேண்டுகோள்!

அடுத்து இடம்பெறுவது இது தொடர்பானதொரு பழைய என் பதிவுக்கான சுட்டி> https://kadavulinkadavul.blogspot.com/2019/01/blog-post_5.html <பொழுது போகவில்லையென்றால் வாசியுங்கள்.

+ + + + +

***

placeholderTheSimplySpace

3mo

What Is beyond the Edge of the Universe?

Everything supposedly began with a huge Big Bang and our universe has been


expanding ever since. But what is beyond the edge of the universe? If everything


originated from a point that is now expanding, there must be an edge to the


universe - and if there is an edge, there must logically be something beyond it.


Science provides some exciting approaches to bring us closer to the ultimate end


of our world and the afterlife - but which one is right?