அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.
பாவப்பட்ட பன்றியைப் பாவி மனிதர்களுடன் இணைத்து, ‘பன்றி மனிதர்கள்’ என்று உருவகப்படுத்தியதற்காக வருந்துகிறேன். இது, ‘வதவத’ என்று நம்மவர்கள் பிள்ளை பெறுவதற்கான ஓர் உதாரணம் மட்டுமே.