“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.
பாவப்பட்ட பன்றியைப் பாவி மனிதர்களுடன் இணைத்து, ‘பன்றி மனிதர்கள்’ என்று உருவகப்படுத்தியதற்காக வருந்துகிறேன். இது, ‘வதவத’ என்று நம்மவர்கள் பிள்ளை பெறுவதற்கான ஓர் உதாரணம் மட்டுமே.