திங்கள், 8 ஜூலை, 2024

கொலைகாரன்களே கொலையுண்டவர்களுக்கு ‘இரங்கல்’ தெரிவிக்கும் நாடகம் காணீர்!!!

ருவன் இன்னொருவனை நேரடியாகத் தாக்கிக் கொல்வது

மட்டும் கொலையல்ல; பொய்யான போதனைகள் மூலம்

அவனைப் பித்தனாக்கி, தன்வயம் இழந்து மரணக் குழியில்

விழச் செய்வதும் கொலைதான்.

போலி ஆன்மிகம் பேசி, தன் விசுவாசிகள் மீது கூடுதல் மூடநம்பிக்கைகளைத் திணித்து, தன்னுடைய காலடி மண்ணுக்காக உயிரிழக்கச் செய்தான் என்ற வகையில் ‘போலோ பாபா’ ஒரு கொலைகாரன்தான்.

அந்தப் போலோ என்னும் போலிச் சாமியார்.....

சில நாட்கள் ஓடி ஒளிந்திருந்த பிறகு ஒரு காணொலி வெளியிட்டு, இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதாகவும் அறிவித்திருக்கிறான்[கூட்டத்தில் மர்ம நபர்கள் விஷம் தெளித்ததே உயிர்ப்பலிக்குக் காரணம் என்று இவனின் வக்கீல் நீதிபதியிடம் சொல்லியிருக்கிறான் > வழக்கைத் திசை திருப்பும் தந்திரம்].

மக்கள் மனங்களில் மிக மிக ஆபத்தான மூடநம்பிக்கைகளைத் திணித்து, அவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மரணப் படுகுழியில் தள்ளியவனே அவர்களுக்காக இறைவனை நினைந்து பிரார்த்தனை செய்வது உலகில் இதுவரை நிகழ்ந்திராத அதிசயம்; கயமைத்தனம்; அயோக்கியத்தனத்தின் உச்சம்.

இவனைக் கைது செய்யாமல், காணொலி மூலம் அறிக்கை வெளியிடும் துணிச்சலை இவன் பெறக் காரணமாக இருப்பவர்களும்[தங்களைக் கடவுளின் தூதுவர் என்று சொல்லிக்கொள்பவர்கள்] ஒரு கொலைகாரனைப் பாதுகாப்பவர்கள் என்ற வகையில் குற்றவாளிகளே. 

“நீங்கள் குற்றவாளிகள்” என்று எவரேனும் குற்றம் சாட்டினால், அவர்களை விசாரணையே இல்லாமலும், ஜாமீன் வழங்காமலும் பத்து மாதங்கள் சிறையில் தள்ள அரசியல் சாசனத்தைத் திருத்தி வைத்திருக்கிறார்கள்.

ஆகவே மக்களே,

“இது இந்தியா அல்ல, சாமியார்களின் சாம்ராஜியம்” என்பதுபோல் எதையும் உளறிவைக்காதீர்!

நன்றி!

கீழ்க்காண்பவற்றையும் படியுங்கள்; மனம் பதற வேண்டாம்.