சனி, 31 ஆகஸ்ட், 2024

‘சத்துக்குரு, ஸ்ரீ ஸ்ரீ ரவி, ராம்தேவ்...’ ஆசீர்வதிக்கப்பட்ட ஆடம்பரப் பிச்சைக்கார்கள்!!!

ழுக்கேறிய கந்தல் ஆடையும் பரட்டைத் தலையுமாய் மக்களைத் தேடிப்போய் வயிற்றுப்பாட்டுக்காகக் கையேந்துபவர்கள் பிச்சைக்காரர்கள்!

ஏந்துவது இழிவென்று, காவி உடுத்துத் தெருவோரங்களில் அமர்ந்து, தேடிவந்து பிச்சையிடுபவர்களுக்காக காத்திருப்பவர்கள் சாதுக்கள்!!
நாடாண்ட மன்னர்களைப் போல் படாடோபமாய் உடைகளும் ஆபரணங்களும் தரித்து, ஆசிரமங்களில் தங்கி, பக்தக்கோடிகள் தேடிப்போய்க் கோடி கோடியாய்க் காணிக்கை செலுத்த, அபயக்கரம் உயர்த்தி, புரியாத தத்துவம் உபதேசித்து, கொஞ்சமும் உழைக்காமல் ஆடம்பர வாழ்க்கை நடத்தும் பிச்சைக்கார்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆண்டவர்களால்[கடவுள்கள்] ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.


எடுத்துக்காட்டாகச் சிலர்:


ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ், சத்துக்குரு ஜக்கி வாசுதேவ்!!!