ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

‘கியான் தேவ் அஹூஜா’ என்னும் ‘பாஜக’வின் மூத்த தறுதலை[யர்?]!!!

‘கியான் தேவ் அஹூஜா’ என்னும் முழுமூடனைரை ‘பாஜக’வின் மூத்த தலைவர்[முன்னாள் எம்.எல்.ஏ., ராஜஸ்தான்] என்கிறது கீழ்வரும் ஊடகச் செய்தி[நகல் பதிவு].

வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட தீராத துயர்கள் கண்டு இரக்கக் குணம் படைத்த அத்தனை மக்களும் திகைத்துக் கண்கலங்கி நிற்கிறார்கள். அனுதாபம் தெரிவித்து உதவிக்கரம் நீட்ட வேண்டிய இந்த மீசைக்காரப் பந்தாப் பேர்வழி[‘கியான் தேவ் அஹூஜா’] வயநாடு இயற்கைப் பேரழிவிற்கு, கேரளத்தவர் பசுக்களைக் கொன்றதே காரணம் என்று பேசியிருக்கிறார்.

கேரளாவில் மட்டுமே பசுக்கள் கொல்லப்படவில்லை, இந்தியா என்னும் புண்ணியப் பூமியில் பரவலாகவே இறைச்சிக்காகப் இவை கொல்லப்படுகின்றன என்பதால், இந்த ஆளின் கூற்றுப்படி, இந்த நாடு முழுதும் இயற்கைப் பேரிடர்களும் உயிர்ப் பலிகளும்  ஏற்பட வேண்டும். 

அவை நிகழும் என்று நம்புகிறாரா நச்சு மனம் கொண்ட இந்த நபர்?

உணவுக்காக இந்த நாட்டில் பசுக்கள் மட்டுமே கொல்லப்படவில்லை; ஆடுகள், பன்றிகள், காட்டு மான்கள், பாம்புகள், பறவைகள் என்று ஏராளமான உயிர்கள் பலியாக்கப்படுகின்றன[தவறு என்றாலும் தவிர்ப்பது அத்தனை எளிதல்ல] என்பது தெரிந்திருந்தும் பசுக்களுக்காக மட்டும் இந்தப் ‘பசு நேசன்’ பரிந்து பேசுவது ஏன்?

காரணம், ‘பாஜக’காரன்ர்கள் பசுவை வைத்துக் கட்சி வளர்ப்பதுதான்.

‘சிவபெருமானின் வாகனம் பசு’ என்று எவனோ ஒரு முட்டாள் கட்டிவிட்டக் கற்பனைக் கதை இவர்கள் கட்சி நடத்தவும் ஆட்சியைக் கைப்பற்றவும் உதவுகிறது.

பால் கொடுத்துப் பசுக்கள் உதவுவதைக் காட்டிலும், அழுக்கைச் சுமக்கும் கழுதைகளும், சாக்கடையில் கலக்கும் மனிதக் கழிவைத் தின்னும் பன்றிகளும் மனிதர்களுக்குச் செய்யும் சேவை மகத்தானது என்பது இந்த வீணர்களுக்குத் தெரியாமல்போனது ஏனென்று தெரியவில்லை!