வெள்ளி, 6 செப்டம்பர், 2024

‘மகா விஷ்ணு’ என்னும் பெயரில் ஒரு புதிய ஆன்மிகப் புளுகன்!!!

#மாணவிகள் அழகாக இல்லாததற்குக் கடந்த பிறவிகளில் செய்த பாவம்தான் காரணம்; மாற்றுத்திறனாளிகளாகப் பிறக்கவும் அதுவே காரணம். பாவம், புண்ணியம், பிரபஞ்சச் சக்தி போன்றவை பூமியில் இறங்கும்# என்றெல்லாம் மனம்போன போக்கில் நஞ்சு கக்கியிருக்கிறான் ‘மஹா விஷ்ணு’ என்று ‘புனை பெயர்’ சூட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றிவந்த ஓர் ஆன்மிகப் பொறுக்கி; நிறையவே சம்பாதித்திருக்கிறான்.

டாக்டர் ராமதாஸ் உட்பட இணையவாசிகள் பலரும் இவன் பேச்சை மிகக் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு இவனைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதில் முனைப்புக் காட்டுவது அறிந்து இவன் ஆஸ்திரிலேயாவுக்குத் தப்பி ஓடியிருக்கிறான் என்பது ஊடகச் செய்தி.

கந்தன், முருகன், பெருமாள், ஐயப்பன், ஆறுமுகம், பரமசிவம் என்பன போன்ற கடவுள்களின் பெயர்களைப் பிள்ளைகளுக்கு வைப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால், ‘மஹா விஷ்ணு’ என்னும் பெயர் எப்போதும் வைக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.

எனவே, ‘மஹா விஷ்ணு’ என்பது இவனின் புனை பெயராக இருக்க வாய்ப்புள்ளது. தான் கடவுளின் அவதாரம்[சத்குரு> பரம்பொருளின் குரு என்பது போல]மக்களை நம்பச் செய்வதற்கு இப்பெயர் பயன்படும் என்பது இவனின் நம்பிக்கை.

கண்ட கண்ட கழிசடைகள் எல்லாம் அவதாரம் என்றும், மகான் என்றும் தம்மைத்தாமே அழைத்துக்கொள்வதற்குத் தடை விதித்து, மீறுவோர் மீது மிகக் கடும் நடவடிக்கைகளை அரசு[கள்] எடுத்திருந்தால் இம்மாதிரி, கடவுள் பெயரில் காலிப் பயல்கள் உருவாகியிருக்க வாய்ப்பே இல்லை!

இனியேனும், இவன் போன்றோர் விசயத்தில் ஆளுவோர் எச்சரிக்கையுடன் செயல்படுதல் வேண்டும் என்பது நம் வேண்டுகோள்.

https://www.vikatan.com/trending/viral/expert-warns-psychological-issues-in-mahavishnus-speech-in-chennai-govt-school