இன்று சட்டமன்றத்தில் பேசிய ‘உ.பி.’ மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "கும்பமேளாவில் பக்தர்கள் புனித நீராடும் நீர் தூய்மையாகவே உள்ளது; பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு மட்டுமல்ல ஏன் குடிக்கவும் உகந்ததுதான்” எனத் தெரிவித்துள்ளார்[https://tamil.news18.com] என்பது செய்தி.
யோகி ஆதித்யநாத் ஒரு யோகி; ஆன்மிகப் பேரொளி; புலன்களை அடக்கி ஆளும் துறவி; இறை நேசர்; இறைவனால் நேசிக்கப்படுபவர். எனவே, பிரயாக்ராஜ் ஆற்று நீரில் இவர் குளிக்கலாம்; அதைக் குடிக்கவும் செய்யலாம். ஆற்று நீரில் உள்ள எந்தவொரு நோய்க் கிருமியும் இவரை நெருங்காது.
மோடி இந்த மண்ணுலக மக்களை உய்விக்கக் கடவுளால் அனுப்பப்பட்டவர்; உலகம் கண்டிராத உன்னதமான பக்திமான்; கடவுளின் ஓர் அம்சம். ஆகவே, இவரும் மனித மலம் கலந்ததும் அழுகிய பிணங்கள் மிதப்பதுமான பிரயாக்ராஜ் ஆற்று நீரில் குளிக்கலாம்; அதை எத்தனை முறையும் அருந்தலாம். இவரைக் கண்டு கிருமிகள் அஞ்சி அலறி விலகி ஓடும்.
இவர்கள் இருவரையும் தவிர்த்து வேறு எவரும்[அமித்ஷா உட்பட> புனிதர் அல்ல என்பதால்] மேற்கண்ட ஆற்று நீரில் குளிப்பது தவறு என்பதைப் பல்வேறு பாவங்களைச் சுமந்து திரியும் அப்பாவி மக்களுக்கும் பக்தர்களுக்கும் பணிவுடனும் கனிவுடனும் தெரிவிக்கிறோம்!
* * * * *