எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

திருத்தந்தையின் திருவாக்கும் நம் கோரிக்கையும்!

“தீமைகளை எதிர்த்துப் போரிட நாம் பலம் பெறுவது கடவுளிடமிருந்தே”[திருத்தந்தை[https://www.vaticannews.va/ta/pope/news/2025-02/pope-message-ambassadors-of-hope-human-trafficking-11-world-day.html].

திருத்தந்தையின் வாக்கு மிகச் சரியானதே.

கடவுளிடமிருந்து பலம் பெற்றுக் காலங்காலமாகத் தீமைகளை எதிர்த்துப் போராடி, அவற்றை ஓரளவுக்குக்கூட ஒழிக்க இயலாததால் சலிப்புற்றுச் சோர்ந்து கிடக்கிறது மனித இனம்.

ஆகவே,

கடவுளிடமிருந்து பலம் பெறுவதைவிடவும், கடவுளானவர் ஒட்டுமொத்தத் தீமையையும் அழித்து, மனிதர்கள் மன அமைதியுடன் வாழ்வதற்கு அருள்புரியுமாறு அவரை வேண்டிக்கொள்வது நல்லது.

திருத்தந்தை அவர்கள் மனித இனத்திற்கு இதை அறிவுறுத்த வேண்டும் என்பது நம் கோரிக்கை.