எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 4 ஏப்ரல், 2025

இத்தனைக் கல் நெஞ்சர்களா ஆப்கானிஸ்தான் ஆடவர்கள்! ஐயகோ அல்லா!!

மதிக்கப்படாத பெண்களுக்கான உரிமைகள்; தடைசெய்யப்பட்ட சுதந்திரம்; கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள்; வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுதல்; கட்டாயப்படுத்தித் திருமணம் செய்தல் என்றிப்படி ஆப்கானிஸ்தான் பெண்கள் பல கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பது உலக அளவில் பலரும் அறிந்த அவலங்கள் ஆகும்[Women's rights in Afghanistan are not respected: restricted freedom of movement, restrictive dress codes, no protection from violence, forced marriage> https://medicamondiale.org/en/where-we-empower-women/ afghanistan.

* * * * *

ணர்வு சலிக்கும் நேரங்களில், கொள்ளை அழகுக் காட்சிகளை அள்ளித் தெளிக்கும் காணொலிகளைக் கண்டு ரசித்து இன்புறுவது என் வழக்கம்.

அத்தகையக் காணொலிகளுள் ஒன்று கீழ்வருவது.

“அடேங்கப்பா, கற்பாறைகளுக்கிடையே சலசலத்து ஓடும் இந்தச் சிற்றாறுதான் எத்தனை அழகு. ஆப்கானிஸ்தானிகள் கொடுத்துவைத்தவர்கள்[வகை வகையான உணவுகளை உண்டு களித்துக் குதூகளிக்கிறார்கள்] என்று சிலாகிக்கத் தொடங்கியபோது, ஆப்கானிஸ்தான் பெண்கள்[ஊன்றிக் கவனித்ததில் இரு பெண் உருவங்கள் தென்பட்டன> தெளிவில்லை] என் பார்வையில் படாதது என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

அந்த அதிர்ச்சியிலிருந்து சற்று முன்னர்வரை விடுபட இயலவில்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

காணொலி: