“நான் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன்” என்று ஒருவர்[மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் உஷா தாகூர்] சொன்னால் அவரைப் பற்றி நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள்?
“இருவரின் பேச்சும் உங்களுக்கு ஏற்புடையவைதானா?” என்று நாம் கேட்டால், “அது பெரிய லூசு[பைத்தியம்]. இது அதைவிடவும் கொஞ்சம் சின்னது” என்பீர்கள்?
நீங்கள் இப்படிச் சொல்வீர்களோ அல்லவோ, நாம் உறுதிபடச் சொல்வது இதையேதான்.
இவர்களைப் போல் பெரிய லூசுகளும் சின்னச் சின்ன லூசுகளும் நிறைந்த கட்சிதான் ‘பாரதீய ஜனதா கட்சி’!
லூசுகளின் இந்தக் கட்சிதான்[இந்தித் திணிப்புடன் மூடநம்பிக்கைகளைத் திணிப்பதும், மதவெறியைப் பரப்புவதும்தான் இவர்களின் முழுநேரத் தொழில்] இந்தியாவைப் பல ஆண்டுகளாக ஆண்டது; ஆண்டுகொண்டிருக்கிறது.
இந்தியர்கள் அத்தனை பேரும் ‘லூசுகள்’ ஆகும்வரை இந்த லூசுகள்தான் இந்த நாட்டை ஆள்வார்களா?
விடை தெரியாத கேள்வி!
* * * * *
மாலைமலர்ச் செய்தி:
#மத்திய பிரதேசத்தின் மோவ் சட்டசபைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் எம்.எல்.ஏ.வாக இருப்பது உஷா தாகூர்.
கடவுள் அதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். நான் கடவுளுடன் நேரடித் தொடர்பு வைத்திருக்கிறேன். என்னை நம்புங்கள் என தெரிவித்தார்#