திங்கள், 9 ஜூன், 2025

மணிப்பூர் ம.அரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வரும்! எப்போது?

                                                           
மணிப்பூர் மக்கள் படும் துன்பங்களைப் பற்றிப் பிரதமர் மோடியின் உணர்வின்மை உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது என்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்.

மணிப்பூரில் மலைவாசிகளான பூர்வீகக் குடிமக்களுக்கும் குடியேறிகளுக்கும் இடையிலான கலவரம் தொடர்கிறது.

கலவரத்தை அடக்க மோடியால் அனுப்பப்பட்ட ராணுவத்தின் முயற்சி வெற்றி பெறவில்லை.

இந்தக்கலவரச் சூழல் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடிப்பதால், மணிப்பூர் வாசிகள் மீதான பற்றுதலை நம் பிரதமர் வெகுவாக இழந்துவிட்டார், அல்லது முழுமையாகத் துறந்துவிட்டார்[நம்போலின் சனோய் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிங்கோம்பம் ஸ்ரீமா பிபிசியிடம் பேசுகையில், “மக்களே தங்களை தற்காத்துக் கொள்ளும்படி அரசாங்கம் விட்டுவிட்டது. குகி மற்றும் மெய்தேய் ஆகிய இரு சமூகத்தினரும் அரசாங்கம் தங்களுக்காக எதையும் செய்யாததால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதன் காரணமாக, வன்முறையைச் சமாளிக்க மக்களே வன்முறையில் ஈடுபடுவதால், நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது” என்கிறார்[https://www.bbc.com/tamil/articles/cml1z28n3r2o]. என்று சொல்லலாம்.

தொடரும் கலவரம் காரணமாக, மணிப்பூர் மக்கள் முற்றிலுமாய் அழிந்துபோனால்[வெகு விரைவில்], அந்த வெற்று மாநிலத்தைத் தன் கட்டுக்குள் வைத்திருப்பது எளிது என்பது மோடியின் திட்டமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இதைப் புரிந்துகொண்டால் ஜெய்ராய் ரமேஷ் போன்ற நாட்டுப் பற்றாளர்கள், அடுத்தடுத்து அதிர்ச்சிக்கு உள்ளாகிப் பைத்தியங்கள் ஆவதிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்!