பாதி எரிந்த மனிதத் தலை, கை, கால் போன்றவற்றைத் தூக்கிக்கொண்டு ஆட்டம்போட்டார்களாம் பக்தர்கள்.
அவர்கள் பக்தர்கள் அல்ல; காட்டுமிராண்டிகள்.
விலங்கு மாட்டிச் சிறையில் அடைக்கப்படுவதற்குரிய மிருகங்களைப் ‘பக்தர்கள்’ என்று குறிப்பிட்டுச் செய்தி வெளியிட்ட ஊடகக்காரனும் அறிவு வளர்ச்சி இல்லாத ஆதிவாசியே.
இந்தக் கொடூரக் காட்சியைப் பரவசத்துடன் பார்த்தார்களாம் மக்கள். கண்டிக்கத் தவறிய அவர்களும் 100% காட்டுவாசிகளே.
ஆட்டம்போட்டவர்களையும் வேடிக்கை பார்த்தவர்களையும்[கண்டுபிடித்து] கட்டி இழுத்துச்சென்று சிறையில் அடைக்காத காவலர்களும் காட்டுமிராண்டி இனத்தைச் சார்ந்த கோழைகள்தான்.
அறிவிலிகளின் எண்ணிக்கை நாள்தோறும் பெருகக் காரணமான மூடத்தனங்களைக் குறைக்க முயற்சிக்காமல், கோயில்கள் கட்டுவதையும், கும்பாபிஷேகங்கள் நடத்துவதையும் வழக்கமாக்கியுள்ள ஒன்றிய & மாநிலங்களின் ஆட்சியாளர்களும் ‘கா.மி.’ பரம்பரயினரே[சிந்திக்கக் கற்றவர்கள் அஞ்சி ஒடுங்கி ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்; மறைவிடங்களில் பதுங்கிக் கிடக்கிறார்கள்] என்றியம்புவதில் நமக்குத் தயக்கம் ஏதுமில்லை.
ஆக, ஒட்டுமொத்தச் சமுதாயமும் காட்டுமிராண்டிக் குழுக்களின் ஆதிக்கத்தில்!
இந்த அவல நிலை மாறுமா? எப்போது?