எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

அகிலம் இகழ் கிறுக்கன் ‘அனுராக் தாக்கூர்’இன் பதவி[எம்.பி.] பறித்திடுக!

//இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ‘பி.எம்.ஸ்ரீ’ பள்ளியில் தேசிய விண்வெளித் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கலந்துகொண்டார்//* என்பது செய்தி.

“முதன் முதலாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட வீரர் யார்?” என்று இந்த ஆள் கேட்டபோது, “நீல் ஆம்ஸ்ட்ராங்”[இவர் சந்திரனுக்கு முதலில் சென்றவர்; விண்வெளிக்கு முதலில் சென்ற வீரர் யூரி காகரின்> சோவியத்]ன்று அறிவியல் ரீதியான பதிலை மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சங்கியோ[அனுராக் தாக்கூர்], "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன்தான்[வால்மீகியால் மனிதரைப்போல் கற்பனை செய்யப்பட்ட ஒரு குரங்கு] என்று சொல்லி, மாணவர்களின் பகுத்தறிவைச் சிதைத்து, அவர்களின் மனங்களில் நஞ்சு தூவியிருப்பது மன்னிக்கத் தகாத கடும் குற்றம்.

இதற்கு முன்பும், இந்த முழுமூடம் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடத்தும், அனுமன் குரங்கு கடல் தாண்டிய கற்பனைக் கதையைப் பரப்புரை செய்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது.

இந்த நபர் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்குத் தடை விதிப்பது மட்டுமல்ல, வாக்காளரிடையே மூடத்தனம் பரப்பிப் பெற்றிருக்கும் ‘எம்.பி.’ பதவியையும் பறித்தல் வேண்டும்.

ஆனால், சங்கிகளின் பிடியிலிருந்து இந்த நாடு விடுவிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

சாத்தியமாவது எப்போது?

* * * * *

*https://www.maalaimalar.com/news/national/think-hanuman-ji-was-1st-space-traveller-bjp-mp-anurag-thakur-to-students-785726?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMw2Z-8BA&utm_content=rundown