எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 7 அக்டோபர், 2025

நீதியரசர் கவாய் மீது இன்று காலணி வீச்சு! நாளை கத்துக்குத்தா?!

//தனியார் செய்திச் சேனலுக்கு ராகேஷ் கிஷோர்[கவாய் மீது காலணி வீச முயன்றவன்] அளித்த பேட்டியில், "காலணி வீசியதில் எந்த வருத்தமும் இல்லை. சரியானதைச் செய்தேன். சிறைக்குப் போனாலும், துன்பம் அனுபவித்தாலும், அனைத்து விளைவுகளையும் ஏற்றுக்கொள்ளும் முடிவுடன்தான் இதைச் செய்தேன். கடவுள்தான் என்னைத் தூண்டினார்" எனத் தெரிவித்தார்//* -செய்தி.

இந்தக் கச்சடாப் பேர்வழி மீது வழக்கப்போட்டு ‘உள்ளே’ தள்ளாமல் தப்பவிட்டது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் அவர்கள் செய்த மாபெரும் தவறு.

நாளையே, சனாதனம் காப்பதாகச் சொல்லிக்கொள்ளும் இன்னொரு கழிசடை, "கடவுள்தான் கவாயைக் கொலை செய்ய அனுப்பினார்” என்று சொல்லிக்கொண்டு, கத்தியுடன் பாய்ந்து தன்னைக் கொல்ல முயன்றால் அவனையும் மன்னிப்பாரா கவாய் அவர்கள்?

அவர் மன்னிப்பாரோ அல்லவோ, நல்ல மனம் கொண்ட மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.

இவன் மிகக் கடுமையான தண்டனைக்குரியவன்!

* * * * *

*https://www.tamilwire.in/amp/news/national/shocking-sc-chaos-71-yo-lawyer-hurls-shoe-at-cji-br-gav