புதன், 20 மே, 2026

சுத்து தலைவா[மோடி] சுத்து! சாதனை நிகழ்த்தலாம் சுத்து!!

ந்திரா காந்தி,  தனது இரண்டு பதவிக் காலங்களிலும்(1966-1977, 1980-1984) மொத்தம் 52 முறை வெளிநாடு சென்று, 69 நாடுகளைப் பார்வையிட்டார். நம்முடைய மேதகு பிரதமர் மோடிஜி அவர்கள் 2014-ஆம் ஆண்டு முதல் இதுவரை 100-க்கும் அதிகமான தடவைகள் வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு, 80-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று இந்திரா அவர்களின் சாதனை[?]யை முறியடித்துள்ளார்.

இது இந்திய அளவில் நிகழ்த்திய சாதனையே தவிர, இது விசயத்தில் உலக அளவில் இவரை இரண்டு பேர் மிஞ்சியிருக்கிறார்கள்.

ஒருவர், கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவராக இருந்த போப் இரண்டாம் ஜான் பால். இவர் 129 நாடுகளுக்கு மேல் பயணம் செய்திருக்கிறார்.

இன்னொருவர், ராணி இரண்டாம் எலிசபெத். இவர் தன் வாழ்நாளில் 116 நாடுகளுக்கு மேல் அதிகாரப்பூர்வமாகப் பயணம் செய்துள்ளார். 

உலகம் சுற்றுவதில் மேற்கண்ட இருவரையும் மிஞ்சி, உலகின் ‘நம்பர் 1 ஊர் சுற்றி’[உலகம் சுற்றியவர்] என்று பெயர் பெற்று, உலக அளவிலான சாதனையாளராக[இதனால் நம் நாட்டிற்கு நல்ல பல நன்மைகள் விளைகின்றனவோ அல்லவோ] நம் மதிப்பிற்குரிய நரேந்திர மோடி அவர்கள் திகழ்ந்திட வேண்டும் என்பது நம் பெருவிருப்பம்.

இந்த நம் விருப்பம் மிக விரைவில் நிறைவேற, நம் பிரதமரை இந்த மண்ணுலகுக்கு[மக்களுக்குத் தொண்டாற்ற] அனுப்பி வைத்த முழுமுதல் கடவுளைப் பிரார்த்திக்கிறோம்!

வாழ்க மோடி! தொடர்க அவரின் உலகச் சாதனைகள்!!

* * * * *

*****//பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 வரை[2026]யில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு அரசுமுறைச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்// -ஊடகச் செய்தி