அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 21 பிப்ரவரி, 2018

பகுத்தறிவாளர் பாராட்டும் என் பழைய 'ஜல்லிக்கட்டு' பதிவு!

நண்பரும் பகுத்தறிவாளருமான 'வேகநரி' அவர்கள், என் பழைய பதிவொன்றை 'மின்னஞ்சல்' மூலமாகப் பாராட்டியிருக்கிறார்[என்னுடைய சில பலவீனங்கள் காரணமாகக் 'கருத்துப் பெட்டி'யைப் பூட்டி வைத்துள்ளேன்!]. மிக்க பெருமிதத்துடன் அதை உங்களுடன் பகிர்கிறேன்.
#கடவுளின் கடவுள்!!!] New comment on கட்டு..கட்டு..ஜல்லிக்கட்டு!...மரணத்துடன் மல்லுக்கட....
இன்பாக்ஸ்
x

வேகநரி noreply-comment@blogger.com

பிற்பகல் 6:08 (13 மணிநேரத்திற்கு முன்பு)
பெறுநர்: எனக்கு
மல்லுக்கட...":

இன்று பல நாட்களின் பின் தமிழ்மணம் வேலை செய்தது.உங்கள் மூடர் உலகம் 
என்ற நல்ல பதிவை கண்டேன். அதில் இடது பக்கத்தில் இந்த ஜல்லிகட்டு மரண 
கட்டு என்ற பதிவு இருந்தது. 2015 வந்த இந்த பதிவை இப்போது தான் கண்டேன். 
தமிழர் என்றால் மாட்டை துரத்தி வீரம் காட்டும் லுசுத்தனமான ஜல்லிகட்டுவை, 
தமிழர்களின் வீர விளையாட்டு என்று ஆதரிக்க வேண்டும் என்ற எழுதபடாத 
சட்டம் இருக்கும் நிலையில், தமிழ் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லி 
கொள்பவர்களும் மாட்டை துரத்தி விளையாட வேண்டும் என்று புர்ச்சி செய்யும் 
மிகவும் அவலமான நிலைமையில், நீங்க பகுத்தறிவோடு இப்படி நல்ல பதிவு 
எழுதியதற்கு பாராட்டுக்கள்.
நமது பண்பாடுகள்,கலாச்சாரங்களை கட்டி காக்கிறோம் என்று அகற்றபட 
வேண்டிய குப்பைகளை எல்லாம் கட்டிகாப்பாற்ற கூடாது :)

Posted by வேகநரி to கடவுளின் கடவுள்!!! at February 20, 2018 at 6:08 PM#

பரமசிவம் kaliyugan9@gmail.com

முற்பகல் 7:29 (17 நிமிடத்திற்கு முன்)


பெறுநர்: வேகநரி
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு என் மனம் நிறைந்த நன்றி நண்பர் 
வேகநரி.

நன்றி...நன்றி...நன்றி.

20 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 6:08 அன்று, வேகநரி 
<noreply-comment@blogger.com> எழுதியது:


நண்பர் வேகநரியின் பாராட்டுப்பெற்ற பதிவு.....

//ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம். 
எனவே, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் இந்த வீரவிளையாட்டு[?] 
இடம்பெறவில்லை// என்பது செய்தி.

‘ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டு; தமிழர்களின் 
குருதியில் கலந்துவிட்ட கலாச்சாரம்’ என்று காரணங்கள் பல 
சொல்லித் தடை விதித்தது தவறு என்று பலரும் சொல்கிறார்கள்.

கலைஞர் கருணாநிதியென்ன, விசயகாந்த் என்ன, இராமதாசு 
என்ன, வைகோ என்ன அனைத்துக் கட்சித் தலைவர்களும் 
தடையை நீக்க வேண்டும் என்று வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கை 
விடுகிறார்கள்;போராட்டங்களையும் அறிவித்திருக்கிறார்கள். 
‘அம்மா’வும் கடிதம் எழுதியிருக்கிறார்.

நடுவணமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், “ஜல்லிக்கட்டு 
நடக்கும்" என்று நம்பிக்கை விதையை ஊன்றியிருக்கிறார்.

ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதிப்பதற்குக் காரணமாக 
இருப்பது, ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக 
விலங்குகள் நலவாரியம் தொடர்ந்த வழக்கு. 

வாரியம் சொல்வதில் உண்மை இல்லையா?  நிகழ்ச்சியில் 
காளைகள் துன்புறுத்தப்படுவதில்லையா? என்பன போன்ற 
கேள்விகள் எழுவது இயல்பு. அவற்றிற்கு.....

''இல்லை...இல்லை'' என்பதே நம்மவர் பதிலாக இருக்கிறது.

காளைகளின் திமிலை வளைத்துப் பிடித்து முழு பலத்துடன் 
இறுக்குவதும், கொம்புகளை அழுந்தப் பற்றி அதன் கழுத்தை 
முறிப்பதுபோல் பக்கவாட்டில் திருகுவதும், வாலை இழுப்பதும் 
துன்புறுத்தல்கள் அல்ல; அல்லவே அல்ல. இது வெறும் விளையாட்டு
...வீர விளையாட்டு.

பதிலுக்குக் காளைகளும் விளையாடுகின்றன. ஆனந்தப் 
பரவசத்துடன், துள்ளிக் குதித்து, எகிறிப் பாய்ந்து வீரர்களை 
மூர்க்கமாய் முட்டித் தள்ளுவதுபோல் பாசாங்கு செய்கின்றன. சில 
நேரங்களில், எசகுபிசகாக அவற்றின் கொம்புகள் குத்திச் சில வீரரகள் 
காயம்பட்டு உயிரிழக்கிறார்கள். அவற்றையெல்லாம் நாம் 
பொருட்படுத்தத் தேவையில்லை. ஏனென்றால் இது நம் 
பண்பாட்டைப் பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டு.

ஒவ்வொரு ஜல்லிக்கட்டின்போது உயிரிழப்புகள் நேரத்தான் 
செய்கின்றன. குறைந்தது மூன்றுநான்கு பேர்.

இதற்காகவெல்லாம் நாம் வருத்தப்படத் தேவையில்லை.
ஏனென்றால், இந்த உயிரிழப்புகள்தான் நம் கலாச்சாரத்தைக் 
கட்டிக்காக்கின்றன. இது தெரிந்துதான், நம் தலைவர்கள் எல்லாம் 
ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கவேண்டும் என்கிறார்கள்.

ஜல்லிக்கட்டுக்குப் பேர்போன அலங்காநல்லூர்க்காரர்கள், 
‘காலங்காலமா ஜல்லிக்கட்டு நடத்திட்டு வர்றோம். கடந்த ஆண்டு 
அது தடைபட்டது. எல்லா ஊருக்கும் பெய்த மழை எங்கள் ஊரில் 
பொய்த்துவிட்டது. காரணம் சாமி குத்தம்’ என்கிறார்களாம். இது 
பத்திரிகை[தின மலர், 27.12.15]ச் செய்தி.

கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் எல்லாம் தவறாமல் 
மழை பெய்ததா என்று நாம் கேட்கக் கூடாது. அப்படிக் கேட்பதும்கூட,
சாமி குத்தம்தான்...சாமி குத்தம்!!!

எந்தவொரு குத்தத்துக்கு ஆளானாலும் சாமி குத்தத்துக்கு நாம் 
ஆளாகக் கூடாது. மழைமாரி பொய்த்துப் போக, தமிழினமே 
பூண்டோடு அழிந்துவிடக்கூடும். ஆகவே......

போராடுவோம். தடைகளைத் தகர்ப்போம்.  நம் வீர விளையாட்டான
ஜல்லிக்கட்டு விழாவைக் கொண்டாடுவோம். உயிரிழப்புகள் ஒரு
பொருட்டல்ல.

ஆம், உயிரிழப்புகள் நமக்கு ஒரு பொருட்டல்ல...அல்லவே அல்ல!

+============================================================================================