ஞாயிறு, 4 ஜனவரி, 2026

‘ஓடிக்கொண்டே ஒத்திகை பார்த்தவன்’... கவிதை வடிவில் ஒரு கண்ணீர்க் கதை!

            ன்று வெளியானது +2 தேர்வு முடிவு.

‘அவன்’ தேர்ச்சி பெற்றிருந்தான்.

மாநிலத்தில் அவனுக்கே முதலிடம்.
முதுகில் தட்டிக் கொடுத்துப் பாராட்டினார்
பள்ளித் தலைமை ஆசிரியர்.

“அம்மா, அப்பா நான் ஃபர்ஸ்ட்” என்று
மனதில் ஒத்திகை பார்த்தவாறு ஓடினான்.
வீட்டில்.....

சாத்திய கதவுக்குள்ளிருந்து.....

ஓலமிடும் அம்மாவின் குரல்:
"குடிகார நாயே, 
அடிடா... அடிச்சே கொன்னுடு.
நிம்மதியா நான் போய்ச் சேர்ந்துடுறேன்.”

கதவைத் திறந்துகொண்டு
தள்ளாடியவாறு அப்பன் வெளியேறினான்.

ஓடிக்கொண்டே நடத்திய தன் ‘ஒத்திகை’
அம்மாவின் ஒப்பாரியில் கரைந்துபோனதால்
கட்டாந்தரையில் கவிழ்ந்து படுத்துக்
குமுறிக் குமுறி அழுதான் ‘அவன்’!