//இன்று திருச்சி கிழக்கில் ரோடு ஷோ நடத்திய விஜய், திருச்சி அந்தோனியார் ஆலயத்தில் முழங்காலிட்டவாரே சென்று, மெழுகுவர்த்தி ஏற்றிப் பிரார்த்தனை செய்தார்.
தொடர்ந்து, கொட்டப்பட்டுப் பச்சநாச்சி அம்மன் கோயிலுக்குப் போய், தன் வெற்றிக்காக மனம் உருகி அம்மனை வேண்டிக்கொண்டார். அருகில் இருந்த மசூதிக்கும் சென்று வழிபாடு செய்தார்.
‘விஜய்’யின் இந்த மும்மத வழிபாடு தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத் தளங்களில் வைரலாகி வருகின்றன// என்பது செய்தி[https://minnambalam.com/vijay-offer-prayer-in-trichy-church-temple-mousque/]
தலைவர் விஜய் அவர்களே நேரில் வந்து வழிபட்டு, காணொலிகளும் புகைப்படங்களும் எடுத்து, இணையத் தளங்களில் வெளியிட்டதால் மூன்று சாமிகளும் ரொம்பவே சந்தோசப்பட்டிருக்கும்[‘விஜய்’யுடன் படம் எடுத்துக்கொள்வது சாதாரண விசயமல்ல].
சாமிகளில் ஒன்றோ இரண்டோ மறந்தாலும் மூன்றாவது சாமி ‘விஜய்’ஐ முதல்வராக்கும் என்பது உறுதியோ உறுதி.
வாழ்க மும்மதச் சாமிகள்! வெல்க தலைவர் விஜய்!!
