வியாழன், 21 மே, 2026

மீண்டும் தமிழ் அவமதிப்பு! மௌனம் சுமக்கும் தமிழினத் தலைவர்கள்!!!

ன்றைய[21.05.2026] ‘தவெக’ அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிலும் தமிழ்த்தாய் வாழ்த்து பின்னுக்குத் தள்ளப்பட்டு,  அவமதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது.

இது முதலில் பாடப்பட்டிருந்தாலும் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசின் மீது நடவடிக்கை ஏதும் எடுக்க வாய்ப்பே இல்லை என்பது உறுதிபடத் தெரிந்திருந்தும்[முன்பு எப்போதும் எடுத்ததில்லை] தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் தராமல் கேவலப்படுத்தியவர் நடிகரும் முதல்வருமான விஜய்தான்[தொடர்புள்ள பதிவு: https://kadavulinkadavul.blogspot.com/2026/05/blog-post_194.html.

இந்த அவமதிப்பைச் சுமந்துகொண்டு திருமாவளவனும் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்களும் நிகழ்விலிருந்து ‘வெளிநடப்பு’ச் செய்யாதது தமிழினத்தவரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.

விஜய் இப்போது தமிழை அவமதித்தைவிடவும் பெருங்கேடு எதையும் இனி எப்போதும் தமிழுக்குச் செய்துவிட இயலாது.

தமிழர் கட்சியினர்[‘அதிமுக’விலிருந்து பிரிந்தவர்கள் உட்பட] ‘தவெக’ விஜய்க்கு அளித்துள்ள ஆதரவை உடனடியாகத் திரும்பப் பெறுதல் அவசியம்.

‘பாஜக’ சங்கிகளின் தலையீட்டை[ஆளுநர் ஆட்சி> திணிப்புகள் செய்தால் கடுமையாக எதிர்த்துப் போராடலாம்]க் காரணம் காட்டி, ‘தவெக’வுக்கான ஆதரவைத் திரும்பப் பெற்றிடத் தயங்கினால்/தவறினால் தமிழையும் தமிழினத்தையும் காக்கத் தவறிய பெரும் துரோகத்தைச் செய்தவர்கள் ஆவார்கள் அவர்கள்!