திங்கள், 6 மே, 2024

வாய்விட்டுச் சிரிக்கலாம்... மோடி அனுமதித்தால்!

யிர் வாழ்வதற்குப் போதுமான அளவு உணவு தேவை. சிறப்பாகச் செயல்படுவதற்கு நல்ல உடலமைப்பும், ஆழ்ந்து சிந்திப்பதற்கு முழு வளர்ச்சி பெற்ற மூளையும் தேவை.

மூளை இல்லையேல் சிந்திப்பது மட்டுமல்ல, உடம்பின் இயக்கம் முழுமையாகத் தடைப்படும்.

மனிதர்கள் என்றில்லை, கோடானுகோடி உயிர்களின் இயக்கத்திற்கும் மூளையே முழு ஆதாரம் என்று சொல்லலாம்[விதிவிலக்குகள் இருக்கக்கூடும்].

பிரபஞ்சத்திலுள்ள பொருள்களையும் உயிர்களையும் கடவுள்தான் படைத்தார் என்று கொண்டாலும், மனிதர் உட்பட ஒவ்வோர் உயிரும் தன்னிச்சையாகச் செயல்படும் வகையில்தான் அவர் படைத்திருத்தல் வேண்டும்.

குறைந்தபட்ச உணவுகூட இல்லாமல் நாம் பட்டினி கிடந்தால், சிந்திப்பது உட்பட நாம் இயங்குவது முற்றிலுமாய்த் தடைப்படுமே தவிர, “ஐயோ பாவம்” என்று இரக்கப்பட்டு, ஆவி வடிவில் அல்லது கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஓர் உருவில் நம் உடம்பில் ஒட்டிக்கொண்டு, நாம் உண்ணும்போதும் உறங்கும்போதும் உடலுறவு கொள்ளும்போதும்[ஹி... ஹி... ஹி!!!] கடவுள் நம்மைக் கண்காணித்து இயக்குவதெல்லாம் இல்லை; இல்லவே இல்லை.

உண்மை இதுவாக இருக்க, நம் பிரதமர் மோடி அவர்கள்,  பிரபல நாளேடான ‘ஈநாடு’ பத்திரிகைக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், உலகின் சூப்பர் பவராக இந்தியாவை மாற்ற ஏதோ ஒரு தெய்வீகச் சக்தி தன்னை இயக்குவதை அடிக்கடி உணர்வதாகச் சொல்லியிருக்கிறார்.

மோடியின் இந்தக் கூற்று நம்மை வாய்விட்டுச் சிரிக்கத் தூண்டுகிறது. மோடி அனுமதித்தால்.....

சிரிக்கலாம்... சிரிக்கலாம்... வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருக்கலாம்!

                                         *   *   *   *   *

https://www.etvbharat.com/ta/!bharat/divine-power-working-through-me-in-helping-india-become-a-superpower-says-pm-narendra-modi-tns24050503662