புதன், 16 செப்டம்பர், 2026

கூத்தாடி ஜோசப்பின் பிள்ளையார் அவதாரம்! ‘கர்த்தர்’ ஆவது எப்போது?!

 சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான பிள்ளையாரை முதல்வர் ஜோசப் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்[மின்னம்பலம்,Published On: தவெக’ தறுதலைகள். 

“கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்கிறார்  பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.

முதல்வர் ஜோசப்  இந்த அயோக்கியர்களின் அடாவடித்தனத்தைக் கண்டிக்காமல் மௌனம் காப்பது[ரசித்து மகிழ்கிறாரா?] கவனிக்கத்தக்கது.

தங்களின் கூத்தாடித் தலைவனை இவர்கள் ‘கர்த்தர்’ ஆகவும் உருமாற்றிக் கொண்டாடும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்!

செவ்வாய், 15 செப்டம்பர், 2026

சொந்தக் கட்சிக்குச் ‘சூனியம்’ வைக்கும் சண்முகமும் வீரபாண்டியனும்!!

//தமிழ்நாட்டில் நடைபெறவிருக்கும் மதுராந்தகம் & தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் பொதுவுடைமைக் கட்சிகள்(இடதுசாரிகள்) தனித்து போட்டியிடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன//[ஊடகங்கள்].

//பாஜக அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கவே தவெக அரசுக்கு அளித்து வரும் வெளிப்புற ஆதரவு தொடரும் என்றும், இதனால் தவெக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் பெ.சண்முகம்[+வீரபாண்டியன்] தெளிவுபடுத்தினார்//[ஊடகம்].தமிழ்நாடு இடைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், ஜோசப் கட்சி ஆட்சியைத் தொடர்ந்து ஆதரிப்போம் என்று இவர்கள் சொல்வது முரண்பாடானது.

இடைத் தேர்தலில் போட்டியிடுகிற இவர்களுக்கு, ‘தவெக’ ஜோசப் உட்படப் போட்டியிடுகிற அனைத்துக் கட்சிக்காரர்களும் எதிரிகள்தான்.

தங்களின் வேட்பாளர்கள் வென்றால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிடுவதோடு, மற்றவர்கள்[+தவெக] வென்றால் விளையும் தீங்குகளையும் சுட்டிக்காட்டுவது தவிர்க்கவே இயலாதது. தவிர்க்கக்கூடாததை எப்படித் தவிர்ப்பார்கள் சண்முகனாரும் வீரபாண்டியனாரும்?

தவிர்த்தால்.....

இவர்களுக்கு ‘வேடதாரிகள்’, ‘பச்சோந்திகள்’, ‘குழப்பவாதிகள்’ என்றெல்லாம் முத்திரை குத்துவார்கள் தமிழ் மக்கள்.

அப்புறம் இவர்கள் தனித்துப் போட்டியிட்டபோதெல்லாம் கிடைத்த கொஞ்சம் வாக்குகளையும், இந்த இடைத் தேர்தலில் பறிகொடுக்க நேரும்; காலப்போக்கில் தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் அழியும். 

திங்கள், 14 செப்டம்பர், 2026

கூரு கெட்ட தமிழனும் கொட்டமடிக்கும் கூத்தாடி ஜோசப்பும்!!

க்களின் வரிப்பணத்தில் முதலமைச்சர் சொகுசுப் பயணம் மேற்கொள்வதாகவும், மாநிலத்தில் விவசாயிகள் & மீனவர்கள் பிரச்சினைகள் இருக்கும்போது இதற்கு அவசியமில்லை என்றும் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, லண்டன் பயணத்தின் மூலம் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த எந்தத் தகவலோ, அல்லது தொழில்முனைவோர்களைச் சந்தித்த புகைப்படங்களோ இதுவரை வெளியாகவில்லை என்று சாடியுள்ளார்.

தமிழக பாஜக தரப்பில் நைனார் நாகேந்திரன், லண்டன் பயணத்திற்காகச் செலவிடப்படுவது அரசுப் பணம்.  ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இவற்றின் மூலம் அறியத்தக்கது என்னவென்றால்.....

மக்கள் வரிப்பணத்தில் சொகுசுப் பயணம் மேற்கொள்ளவும், கூத்தாடி கூத்தாடிச்சியைச் சந்தித்துக்  குதுக்களிக்கவும்[+கார் பந்தயத்தை வேடிக்கை பார்த்தல்]தான் இந்தப் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் மூலம் அத்துபடியாய் உணரத்தக்கது.....

தமிழன் எத்தனைப் புத்திசாலியாக இருந்தாலும் அவனுடய அத்தனைப் புத்திசாலித்தனமும், திரைப்படங்களில் கவர்ச்சி நடிகைகளுடன் கூத்தடித்த தன்னைப் பார்த்தாலே மழுங்கிவிடும் என்பது கூத்தாடி ஜோசப்பின் நம்பிக்கை.

இந்தக் கூத்தாடி மீதான மயக்கத்திலிருந்து எப்போது தமிழன்[குறிப்பாகத் தமிழச்சிகள்] மீண்டெழுவான் என்று ஏங்கிக் கிடப்பதே, சிந்திக்கத் தெரிந்த கொஞ்சம் தமிழர்களின் தலைவிதி! 

ஞாயிறு, 13 செப்டம்பர், 2026

சமணர்களின் கலங்கடிக்கும் ‘கலத்தல்’ தத்துவம்!

'பிரபஞ்சம் கடவுளால் படைக்கப்பட்டது' என்னும் கருத்தாக்கத்தைச் சமண மதத்தவர் ஏற்பதில்லை. 

'ஆதியும் அந்தமும் இல்லாதது பிரபஞ்சம். அது இருக்கிறது; இருந்துகொண்டே இருக்கிறது. எப்போதும் அழிவதும் இல்லை' என்று நம்புகிறவர்கள் அவர்கள்.

இருந்துகொண்டே இருக்கிற இந்த உலகில்[பிரபஞ்சத்தில் இதுவும் அடக்கம்] பழம் வினைப்பயன்களுடன் வந்து பிறந்திருக்கிறோம் நாம். அவற்றைக் களைவதற்கான வாய்ப்பை இங்கு நாம் பெற்றிருக்கிறோம். அதற்கான வழிதான் அகிம்சை.

கொல்லாமை, திருடாமை, புலால் உண்ணாமை போன்றவற்றைக் கடைபிடிப்பதே அகிம்சை நெறியாகும்.

அகிம்சை நெறியில் வாழ்ந்துகாட்டுவதன் மூலம் பிறவிக்குக் காரணமான அனைத்து வினைப்பயன்களிலிலிருந்தும் விடுதலை பெறலாம். பெற்றால்.....
'பிரபஞ்ச ஒளியுடன் இரண்டறக் கலந்து பேரானந்த நிலையை எய்த முடியும்' என்கிறார்கள் சமணர்கள்.

சமணர்களின் நம்பிக்கை மெய்யானதாகவே இருக்கட்டும். ஆனால், 'பிரபஞ்ச ஒளியில் கலப்பது' என்கிறார்களே, அதுதாங்க புரிய மாட்டேங்குது.

பிரபஞ்ச ஒளியில் கலக்குற நாம் எப்படியிருப்போம்? எவ்வளவு காலத்திற்கு அங்கேயே இருப்போம்?

செத்துப்போனா, உடம்பு உருவாகக் காரணமாயிருந்த அத்தனை அணுக்களும் அழிஞ்சுடுது; அல்லது, காணாமல் போயிடுது. அப்புறம், 'நான்' அல்லது 'நாம்' என்பவை எப்படியிருக்கும்?

ஏதோ ஆவி போல, புகை போல என்று கொண்டாலும், அந்த ஆவி வடிவிலோ புகை வடிவிலோ பிரபஞ்ச ஒளியுடன் கலந்துவிடுவதன் மூலம் நாம் அடையும் பலன் என்ன? கலந்த பிறகும் ‘நான்’ என்னும் உணர்வு நமக்கு இருக்குமா?

'பேரானந்தம்' என்கிறார்கள். அதென்ன பேரானந்தம்? அந்தப் பேரானந்தத்தில் எவ்வளவு காலத்துக்குத் திளைத்திருப்போம்?

சமணர்கள் என்றில்லை, மற்ற மதவாதிகளும் இப்படித்தான். ஆன்மா, கடவுள், சொர்க்கம், நரகம்னு எதையெதையோ சொல்லியிருக்கிறார்கள். நம்ம மரமண்டைக்குத்தான் எதுவுமே புரியமாட்டேங்குது!

சனி, 12 செப்டம்பர், 2026

கொல்லும் மதவாதிகள்! மனிதம் வெல்க!!

தங்கள் பலவும் மனிதநேயத்தை வலியுறுத்துகின்றன. அவற்றைப் பின்பற்றுவதாகவும் பின்பற்றுமாறும் சொல்லும் மதவாதிகள், ஆதிக்க வெறியுடன் பிற மதத்தவரைத் தாக்கி அழித்ததோடு, தம் மதம் சார்ந்தவர்களையே கொன்று குவித்தார்கள் என்பது  வரலாறு. 

சில நிகழ்வுகள்:

*****இஸ்லாம்: கர்பலா போர் போன்ற ஆரம்பகால நிகழ்வுகள் ஷியாக்களின் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாகவும் துக்க நாளாகவும் அனுசரிக்கப்படுகிறது.

ஈராக் போர்(2003-க்குப் பிறகு), சிரிய உள்நாட்டுப் போர் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் மசூதிகள் மற்றும் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலான சன்னி மற்றும் ஷியா முஸ்லிம்கள் குர்ஆன் மற்றும் அடிப்படை நம்பிக்கைகளில் ஒற்றுமையுடன் வாழ்ந்தாலும், அரசியல் காரணங்களால் தூண்டப்படும் தீவிரவாத மோதல்கள் இன்றும் மனித உயிர்களைப் பலியிட்டு வருகின்றன.

*****கிறிஸ்தவம்: செயிண்ட் பார்த்தலோமெவ் படுகொலை(St. Bartholomew's Day Massacre - 1572): பிரான்சில் கத்தோலிக்கப் படைகளுக்கும் பிராட்டஸ்டண்ட் பிரிவினரான ஹூகேனாட்களுக்கும்(Huguenots) இடையே நடந்த மோதலில், பாரிஸ் நகரில் மட்டும் ஆயிரக்கணக்கான பிராட்டஸ்டண்டுகள் படுகொலை செய்யப்பட்டனர். பிரான்ஸ் முழுவதும் பல வாரங்கள் நடந்த இந்த வன்முறையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

பிரெஞ்சு மதப்போர்கள் (French Wars of Religion - 1562–1598): பிரான்சில் கத்தோலிக்கர்களுக்கும் பிராட்டஸ்டண்டுகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போர்களில் வன்முறை, பஞ்சம் மற்றும் நோய்கள் காரணமாக சுமார் 2 முதல் 4 மில்லியன் மக்கள் உயிரிழந்தனர்.

முப்பது ஆண்டுப் போர்(Thirty Years' War - 1618–1648): ஜெர்மனி மற்றும் மத்திய ஐரோப்பாவில் கத்தோலிக்க நாடுகளுக்கும் பிராட்டஸ்டண்ட் நாடுகளுக்கும் இடையே நடந்த மிகக்கொடூரமான போர். இது ஐரோப்பிய வரலாற்றில் மிகப் பெரிய மனிதப்பேரிழிவை ஏற்படுத்தியது. போர்க்கள மரணங்கள் மற்றும் பட்டினி காரணமாக ஜெர்மனியின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு(சுமார் 4 முதல் 8 மில்லியன் மக்கள் வரை) பலியாகினர்.

*****இந்துமதம்: பண்டைய மற்றும் இடைக்கால இந்திய வரலாற்றில் இந்து அரசர்களுக்கு இடையேயான போர்கள் நிலப்பரப்பு விரிவாக்கம், அதிகாரம் மற்றும் வீண் பெருமைக்காக நடந்தன. இப்போர்களில் ஆயிரக்கணக்கான வீரர்களும் பொதுமக்களும் கொல்லப்பட்டனர். எனினும், அக்காலத்துப் போர்களில் நிகழ்ந்த உயிர்ச்சேதங்கள் நேரடிப் பதிவுகளாகவும் முழுமையானவையாகவும் இல்லை.

தவாதிகளுக்கும் அவர்களின் கடவுள்களுக்கும் சிந்திக்கும் அறிவு இல்லாமல்போனது ஒரு பொருட்டல்ல; மனிதம் போற்றி வாழவேண்டிய பெரும்பாலான மக்களுக்கும்[குறிப்பாகப் பக்தர்கள்] அது இல்லாமலிருப்பதுதான் பெரிதும் வருந்தத்தக்கதாகும்!

வெள்ளி, 11 செப்டம்பர், 2026

உலகின் ‘நம்பர் 1’ தலைவர் ஆனார் ஜோசப்[த.நா.முதல்வர்]! தாய்க்குலம் ‘திருஷ்டி’ கழிக்கும்?

//முதல்வர் விஜய் துபைக்குச் சென்ற எமிரட்ஸின் யுஏஇ547 விமானத்தை, ஃபிளைட் ரேடார் தளத்தில் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் டிராக் செய்துள்ளனர். இதனால், அந்த விமானம் உலகில் அதிகளவில் டிராக் செய்யப்பட்ட விமானங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது//[https://www.dinamani.com/tamilnadu/2026/Sep/11/the-flight-travelled-chief-minister-vijay-tops-the-flightradar-rankings]

இன்று தமிழில் வெளியான மிகு பரபரப்பான செய்திகளிலும் இச்செய்தி முதலிடம் பிடித்துள்ளது.

ஜோசப் பயணித்த விமானம் உலக அளவில் மிக அதிகமாக டிராக் செய்யப்பட்டதன் மூலம், நம் ஜோசப் உலகின் நம்பர் 1 தலைவராகவும் உயர்வு பெற்றுள்ளார்.

தமிழர்கள் இனி உலகில் எந்தவொரு நாட்டுக்குச் சென்றாலும் தலை நிமிர்ந்து நடக்கலாம்.

பொறாமை உள்ளம் கொண்ட பொல்லாதவர்களால் தலைவருக்குக் ‘கண் திருஷ்டி’ படுவது உறுதி.

அவரை முதல்வராக்கிய நம் தாய்க்குலத்தவர், அவர் தமிழ்நாடு திரும்பியவுடன் அவருக்குத் திருஷ்டி கழிப்பார்கள் எனினும், இப்போதே தலைவரின் படத்துக்கு திருஷ்டி கழித்தால் எதிர்பார்க்கும் முழுப் பயனும் விளையும்.

உலகில் தனக்கும் மேலான தலைவன் இல்லை என்று தலைக்கனத்துடன் அலையும் அமெரிக்கா அரசுத் தலைவரான டோனால்ட் டிரம்பால், திரும்புகாலில் நம் தலைவர் ஜோசப் பயணிக்கும் விமானத்துக்கு ஆபத்து நேரக்கூடும் என்பதால், அந்த விமானத்தைப் பாதுகாப்புடன் அழைத்துவர, குறைந்தபட்சம் நான்கைந்து வான்படை ஜெட் விமானங்களை அனுப்புவது பிரதமரான மோடியின் கடமையாகும்!

வியாழன், 10 செப்டம்பர், 2026

மனிதர்களின் ‘நிரந்தர’ எதிரி இயற்கையே, கடவுள் அல்ல!

யற்கையே மனிதர்களின் பேராற்றல் வாய்ந்த நிரந்தர எதிரி[கடவுள் அறியப்படாத, அல்லது நிரூபிக்கப்படாத எதிரி???] என்பது ஆழ்ந்து சிந்தித்தால் புரியும். இதனுடன் எவ்வளவுதான் போராடினாலும், முழு வெற்றி காண்பது சாத்தியமே இல்லை.இதனுடனான போராட்டத்தால் விளையும் துன்பங்களுடன், பகைமை காரணமாக மனிதர்கள் மனிதர்களுடன் மோதும்போது, அவர்கள் உறும் துன்பங்களின் அளவு அதிகரிக்கிறது.

ஆகவே, அற்பக் காரணங்களுக்காக எல்லாம், மனிதர்கள் மனிதர்களுடன் பகைமை பாராட்டுவது அறிவுடைமை அல்ல.


ஒட்டுமொத்த மனிதர்களும் இணைந்து ஆறறிவு என்னும் ஆயுதம் ஏந்திப் போராடினால் மட்டுமே நோய்கள், இயற்கைப் பேரிடர்கள், மரணப் பயம் போன்றவற்றால் நேரும் துன்பங்களின் அளவைக் கணிசமாக[‘முழுமையாக’ எப்போதும் சாத்தியமில்லை]க் குறைக்க இயலும்.

புதன், 9 செப்டம்பர், 2026

திருப்பதி கோயிலில் செத்தால் வைகுண்டம்! திருவண்ணாமலையில்... கைலாசம்!!

//இந்தியாவில் உள்ள முக்கியக் கோயில்கள் மற்றும் ஆன்மீகத் திருவிழாக்களில் கூட்ட நெரிசலில் சிக்கி, பக்தர்கள் உயிரிழப்பது அடிக்கடி நிகழ்கிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின்(NCRB) தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த இரண்டு தசாப்தங்களில் கூட்ட நெரிசல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திராவில் உள்ள ஒரு தனியார் வெங்கடேஸ்வரா கோயிலில்[நவம்பர், 2025] 3,000 பேர் மட்டுமே கொள்ளக்கூடிய இடத்தில் 25,000-க்கும் அதிகமானோர் கூடியதால் ஏற்பட்ட நெரிசலில் 9 பேர் பலியாயினர்//
இணையத்தில் மேற்கண்ட தகவலைத் தேடிப் பெறுவதற்குத் தூண்டுதலாக அமைந்தது கீழ்வரும் சோகச் செய்தி.
//அண்​ணா​மலை​யார் கோயி​லில்[திருவண்னாமலை] நேற்று முன்​தினம் மாலை நடை​பெற்ற அபிஷேகத்​தில், சென்​னையைச் சேர்ந்த ரவிசங்​கர்(68) என்​பவர் தனது குடும்​பத்​தினருடன் பங்​கேற்​றார். அப்​போது கூட்​டம் அதி​க​மாக இருந்த நிலை​யில் அவருக்கு மூச்​சுத்​தினறல் ஏற்​பட்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் மயக்​கமடைந்​தார். அவரை மீட்டு, கோயில் வளாகத்​தில் உள்ள மருத்​துவச் சிகிச்சை மையத்​தில் முதலுதவி அளிக்​கப்​பட்​டது.

பின்​னர், மேல்​சிகிச்​சைக்​காகத் திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக்​ கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோ​தனை செய்த மருத்​து​வர்​கள் ரவிசங்​கர் ஏற்​கெனவே உயி​ரிழந்துவிட்​ட​தாகத் தெரி​வித்​தனர்//[https://www.hindutamil.in/news/tamilnadu/devotee-dies-after-suffocation-amid-huge-crowd-at-annamalaiyar-temple].

இந்தப் புண்ணிய மண்ணில் உள்ள பிரபலமான கோயில்களில் கூட்ட நெரிசலில் சிக்கிப் பக்தர்கள் உயிரிழப்பது என்பது அவ்வப்போதைய நிகழ்வாக உள்ளது.

தீராத துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காகத்தான், கோயில்களில் எழுந்தருளியிருக்கும் சாமிகளை[சிலைகள்> மந்திரம் சொல்லிச் சாமிகளைக் குடியேற்றுவதாகச் சொல்வது ஒரு கூட்டத்தார் காலங்காலமாகச் செய்யும் பித்தலாட்டம்] தேடிச் செல்கிறார்கள் பக்தர்கள். எந்தவொரு சாமியும் கண்டுகொள்வதில்லை.

எந்தெந்தச் சாமி எத்தனை எத்தனைப் பக்தர்களின் துன்பம் களைந்தது என்பதற்கு ஆதாரப் பட்டியல் தந்தவர் எவரும் இல்லை[சாமிகள் தம் பக்தர்களுக்குத் திடீர் மரணங்களை மட்டுமே பரிசாகத் தருகின்றன].

ஆனால், கோயிலுக்குப் போய் மிதமிஞ்சிய கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கோ ஒரு நீண்ட பட்டியலே தயாரிக்கலாம். 

கொஞ்சம் சிந்தித்தாலே இந்த உண்மை புரியும்.

சிந்திக்கவிடாமல் தடுப்பவர்கள் ஆன்மிகம் பேசிக் கோடிகளில் புரளும் போலிச் சாமியார்களும், ஆன்மிகச் செய்தி வெளியிட்டு வருமானம் பெருக்கும் ஊடகக்காரர்களும்தான்.

இவர்களால்தான் கூட்டம் கூட்டமாகச் சென்று கோயில்களில் குவியும் புத்தியில்லாத பக்தர்கள் அதிகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கூட்டம் அதிகரிப்பதற்கு, கோயிலுக்குள் மண்டையைப் போட்டால் நேரடியாகச் சொர்க்கம்[வைகுண்டம் & கைலாசம்] சேரலாம் என்னும் நம்பிக்கையும் காரணமோ?!

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

பரிசுத்த வேதாகமும்[பைபிள்] அசுத்த ஜோசப்பும்!

//சட்டசபையில் திமுக-வின் "மிசா" காலத் தியாகங்கள் & ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த காரசாரமான விவாதத்தின்போது, "மிசாவில் என்ன நடந்தது என்று எங்களுக்குத் தெரியும்" என்று முதல்வர் விஜய் பேசினார். அப்போது அவர் தனது வலது உள்ளங்கையைத் தாடையின் அருகே வைத்து ஒரு சைகையைக் காட்டினார்

1976 அவசரநிலைக் காலத்தில் மிசா(MISA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது, மு.க.ஸ்டாலின் போலீஸ் காவலில் கடுமையாகத் தாக்கப்பட்டு அவரது தாடை எலும்பு முறிந்தது என்பது வரலாறு. விஜய் செய்த அந்தச் சைகை, ஸ்டாலினுக்கு ஏற்பட்ட அந்த உடல்ரீதியான பாதிப்பைக் கிண்டல் செய்யும் விதமாகவும், உருவக்கேலி(Body-shaming) செய்யும் வகையிலும் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன//[ஊடகங்கள்]
எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் ஏற்கத்தக்கவை என்பதை உறுதிப்படுத்துகிறது இந்தக் காணொலி.
ஸ்டாலினோ வேறு எவரோ அவரின் உடல் குறைபாட்டைச் சுட்டிக்காட்டிக் கேலி செய்யும் ஜோசப்[தமிழ்நாட்டின் முதலமைச்சர்]புக்கு இந்தக் கழிசடைக் குணத்தைக் கற்றுக்கொடுத்தது கிறித்தவர் போற்றும் புனித நூலான பைபிளா?
அல்ல... அல்ல... அல்லவே அல்ல.
அதைப் ‘பரிசுத்த வேதாகமம்’ என்பார்கள்.
பரிசுத்தரல்ல இந்த ஜோசப்.

திங்கள், 7 செப்டம்பர், 2026

காலத்தை வென்ற ஒரு கவிதை! கருப்பொருள்: தெருநாய்!!

'கிளு கிளு' கன்னியரை வர்ணித்துக் கவிதை எழுதாத கவிஞர்களே இல்லை. தெரு நாய்களைப் பற்றி யாரேனும் கவிதை படைத்திருக்கிறார்களா?

காசாவயல் கண்ணன் எழுதிய, 'நடைபாதை நண்பர்கள்' என்னும் தலைப்பிலான ஒரு கவிதையை['காமதேனு’, 30 ஜூன் 2019] வாசித்து மனம் நெகிழ்ந்தேன்; கொஞ்சமே கொஞ்சம் புதுப்பித்து உங்களுக்காக இதைப் பதிவு செய்கிறேன்.

வீட்டு நாய்களைப் போல
இதுகளுக்கு
விருப்பப் பெயரெல்லாம் இருக்காது;
தெருநாய் என்ற பொதுப் பெயர்
மட்டும்தான். 

பல நாள் கழித்துப் பார்த்த
பால்ய நண்பனாக
வாஞ்சை காட்டும் ஒரு நாய்.

முன்னாள் காதலியைப் போல்
ஓரக்கண்ணால் பார்த்து
ஒதுங்கிப்போகும் மற்றொரு நாய்.

தாய் நாய் முலையில்
முட்டி முட்டிப்
பால் குடித்த ஞாபகத்தில்.....

என் கால் விரல்களை
விடாமல் சப்பும் குட்டிநாய்.

“என் பசி தணிப்பாய்தானே?” 

என்று 

பார்வையாலேயே கெஞ்சும் 

பாவப்பட்ட பிறவி.


நான்கு கவளம் எச்சில் சோற்றுக்கு

எத்தனை நேரமும் வாலாட்டும் 

நன்றியுள்ள ஜீவன்.


வீடுதோறும்
நாய் இருக்கிறதோ இல்லையோ
தெருநாய்கள் இல்லாத 
தெருக்களே இல்லை!

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

கண் பார்வை இழக்கும் பிள்ளைகள்... கலங்காமல் காப்பாற்ற முயலும் பெற்றோர்!

 குழந்தைகளைப் பாதித்திருப்பது அரிய மரபணுக் கண் கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள்.

எதிர்காலத்தில், பார்வையைப் பறிகொடுக்கும் பாசமிகு பிள்ளைகளின் வாழ்க்கையில் ஓரளவுக்கேனும் மகிழ்ச்சியைத் தக்க வைக்க[வேறு வழியில்லை], பெற்றோர்கள் கையாளும் வழிமுறையும் அரிதானதுதான்.

மேற்கண்ட மரபணுக் கண் நோய் தாக்குவது இயற்கை என்றால், எதுவும் சொல்லத் தோன்றவில்லை. கடவுள் என்றால்.....

‘உலகைப் படைத்தவன் முற்றிலுமாய்[பரந்து> மிச்சம் சொச்சம் இல்லாமல்] அழிவானாக’ என்ற வள்ளுவர் வாக்கு நினைவுக்கு வருகிறது.

'இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்' -குறள்.

https://x.com/hashtag/RetinitisPigmentosa?src=hashtag_click

சனி, 5 செப்டம்பர், 2026

இவர்கள் ‘சாவு’க்கு அஞ்சாதவர்கள்!... சாதனையாளர்கள்!!

*"ஒன்றும் தேங்கிப் போகாது நம் நாட்டு முன்னேற்றம் என்று உங்களை வணக்கத்தோடெல்லாம் கேட்டுக்கொண்டு, இந்த ஏற்பாடு பண்ணி இவ்வளவு நேரம் பொறுமையாய் இருந்ததற்கெல்லாம், என்னைக் காது கொடுத்துக் கேட்டதற்கு என்னுடைய மனப்பூர்த்தியான நன்றியறிதலைத் தெரிவித்துக்கொண்டு என் பேச்சை முடித்துக்கொள்கிறேன். வணக்கம்!" 

இந்த உரையை ஆற்றிய பிறகு, உடல்நலக் குறைவால் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியார், டிசம்பர் 24, 1973 அன்று தனது 94ஆவது வயதில் காலமானார்[விக்கிப்பீடியா]

*இருபத்தி ஆறாம் வயதில் எழுதத் தொடங்கிய பெ.நா.அப்புஸ்வாமி தொன்னூற்றி ஐந்தாம் வயதில் அதாவது 1986ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் இறக்கும்வரை எழுதிக்கொண்டு இருந்தார். தான் எழுதிய ஒரு கட்டுரையை ஹிந்துப் பத்திரிகைக்கு அஞ்சலில் சேர்த்துவிட்டு வரும்போதுதான்  இறந்தார்[https://ramachandranwrites.blogspot.com/2019/12/31.html].

*தமிழகத்தின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், பிரபல மருத்துவருமான டாக்டர் எச். வி. ஹண்டே(Dr. H. V. Hande) தற்போது நலமுடன் வாழ்ந்து வருகிறார். 2026ஆம் ஆண்டின்படி அவருக்கு 99 வயது ஆகிறது. சென்னை செனாய் நகரிலுள்ள தனது ஹண்டே மருத்துவமனையில்(Hande Hospital) ஏழை எளிய மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தொடர்ந்து மருத்துவச் சேவை வழங்கிவருகிறார்[இணையம்].

*இரண்டாம் எலிசபெத் மகாராணி[95 வயது]க்குப் புற்றுநோய் இருப்பதையும், 2021ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப் பிறகு அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்றும் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் தனக்கே உரிய மனவுறுதியுடன், “அடுத்த ஆண்டு பிளாட்டினம் ஜூபிலியைக் கொண்டாட விரும்புகிறேன் அதுவரை நான் உயிருடன் இருக்க உதவ முடியுமா?” என்று மருத்துவர்களிடம் கேட்டார்[https://www.msn.com/en-gb/health/mindandbody/5-things-people-typically-say-when-they-learn-they-re-going-to-die/ss-AA1MqwtR?uxmode=ruby&cvid=6a8aea95d7064c359a28018a7c38390e&ocid=edgdhpruby&pc=NMTS&ei=25#image=1].

*1954இல் வெளியான 'தி பிளாக் நைட்' (The Black Knight) திரைப்படத்தில் ராணி கினிவியராக(Queen Guinevere) நடித்தது உட்படப் பல வேடங்களில் தோன்றிய புகழ்பெற்ற பிரிட்டிஷ் நடிகை ஜீன் லாட்ஜ், தனது 99ஆவது வயதில் புதன்கிழமை(ஆகஸ்ட் 5) காலமானார்.  தனது மறைவுக்கு முந்தைய நாளில்தான் தனது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார்[https://www.msn.com/en-gb/entertainment/news/jean-lodge-dead-hollywood-legend-dies-in-sleep-as-family-pay-heartbroken-tribute/ar-AA29P1Ry?uxmode=ruby&ocid=edgdhpruby&pc=NMTS&cvid=6a7b34dbfbf84c159c1810dfb7915a0c&ei=61].

*டாக்டர் சூரி ஸ்ரீமதி[பெண் மருத்துவர்] ஹைதராபாத்தில் வசிக்கிறார். 92 வயதிலும் அவர் தொடர்ந்து அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார்.

1958இல் எம்பிபிஎஸ் பட்டம் பெற்று மருத்துவராகத் தனது பணியைத் தொடங்கிய டாக்டர் சூரி ஸ்ரீமதி, இன்றும் சுறுசுறுப்புடனும் உற்சாகத்துடனும் தினமும் நோயாளிகளைப் பார்த்துக்கொண்டு, அவ்வப்போது சிசேரியன் அறுவைச் சிகிச்சைகளையும் செய்துகொண்டு, ஓர் இளம் மருத்துவரைப் போல மருத்துவச் சேவைகளை வழங்கிவருகிறார்[https://www.bbc.com/tamil/articles/cn5nxx3n9xgo].

**********

***சாவுப் பயத்தை வென்று சாதனை நிகழ்த்தியவர்கள் பலரையும் பட்டியலிட்டால் அது வெகுவாக நீளும் என்பது அறியத்தக்கது.

வெள்ளி, 4 செப்டம்பர், 2026

காது நோக ஒரு சோகக் கதை கேட்டேன்![பழங்கஞ்சி]

பேருந்துக்காக நான் காத்திருந்தபோது அது நிகழ்ந்தது.

''சத்தமா சொல்லு'' -சற்றே அதட்டும் குரலில், என் முன்னே நைந்த கைலியும் நரையோடிய தலையுமாக நின்றுகொண்டிருந்த  ஒரு நடுத்தர வயதுக்காரர் சொன்னபோதுதான், அவருக்கு அருகே இருந்த பெண் அவரிடம் ஏதோ சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்தது. கவனத்தை அவர்கள் பக்கம் செலுத்தினேன்.

அவள் சொன்னாள்: ''ஒரு வாரமா புரோட்டா சாப்பிடணும்னு புள்ளைங்க சொல்லிட்டிருக்காங்க. எதுப்பால இருக்குற  ஓட்டலில் சாப்பிட்டுட்டு அடுத்த பஸ்ஸில் ஊருக்குப் போகலாங்க.''

''என்கிட்டயும் சொன்னாங்கதான். மறந்தே போய்ட்டேன்'' என்றவர், லுங்கியை இடுப்பளவுக்குத் தூக்கிப்பிடித்து அண்டர்வேர் பாக்கெட்டிலிருந்த கொஞ்சம் பண நோட்டுகளை எண்ணிப்பார்த்தார்.

''பஸ் டிக்கட்டுக்குப் போக மிச்சம் பணம் இருக்கு. பத்து புரோட்டா வங்கலாம். நீங்க மூனுபேரும் இங்கயே இருங்க. நான் புரோட்டா பார்சல் வாங்கிட்டு வர்றேன்'' என்று சொல்லி நகர முற்பட்டபோது, ''பார்சல் எதுக்கு? கடையிலியே சுடச்சுடச் சாப்பிட்டுட்டு அடுத்து வர்ற பஸ்ஸில் போயிடலாம்'' என்றாள் அவள்.

''அது வேண்டாம்.''

''ஏங்க?''

''இந்த ஓட்டல் வசதியானவங்க சாப்பிடுற இடம். அவனவன் காடை கவுதாரி ரோஸ்ட், புறா எறா வறுவல், சிக்கன் பிரை, மட்டன் பிரியாணின்னு காசைக் கணக்குப் பார்க்காம இஷ்டப்பட்டதெல்லாம் சாப்பிடுவான். அதைப் பார்த்தா நம்ம புள்ளைங்க ரொம்பத்தான் ஏங்கிப்போயிடும். இப்போ பார்சல் போதும். அடுத்த வாரம் சம்பளம் வந்ததும் பிராய்லர் கறி சமைச்சுடலாம்'' என்று சொல்லி அவளின் பதிலை எதிபாராமல் அந்தச் 'சைவ & அசைவ' உணவு விடுதியை நோக்கி நகர்ந்தார் லுங்கிக்காரர்.

அந்தப் பெண், நான் அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்ததை அனுமானித்திருக்க வேண்டும். சற்றே தலை குனிந்து எட்ட நின்றுகொண்டிருந்த தன் பிள்ளைகளின் பக்கம் பார்வையைச் திருப்பினாள்.

நானும் என் பார்வையைத் திசை திருப்பினேன். பெருஞ்சுமையுடன் எனக்கான பேருந்து வருவது தெரிந்தது.

வியாழன், 3 செப்டம்பர், 2026

நேபாளப் பேரழிவு... பக்தி முற்றினால் பகுத்தறிவு பறிபோகும்!

 

மேற்கண்ட காணொலிச் செய்தி ஒருபுறம் இருக்க, கட்டடம் முற்றிலுமாய் இடிந்து நொறுங்கி விழாமலிருந்ததற்கான[கீழ்த்தளங்கள் சிதைந்துள்ளன] காரணங்களை, கருத்துரை வழங்கியவர்களில் கணிசமானவர்கள் சிறப்பாக ஆராய்ந்திருக்கிறார்கள். அவற்றுள் கீழ்க்காணும் இரண்டும் இடம்பெற்றுள்ளன.

*அந்தக் கட்டிடத்தின் இரு பக்கங்களிலும் தரைத் தளத்திற்குப் பாதுகாப்பாக இரு கட்டிடங்கள் ஒட்டி இருக்கின்றன. இதுவே அந்தக் கட்டிடம் பாதுகாக்கப்பட்டதற்கான காரணம்.

*அருகில் உள்ள பழைய வீடு ஒன்று இடியாமல் உள்ளதே. அது போலத்தான் இதுவும்.

அறிவுபூர்வமாக இவர்கள் சிந்தித்தது வரவேற்கத்தக்கது.

மதச் சார்புள்ள பக்தர்களும், எதையும் ஆராய்வதற்கான ஆறறிவு தங்களுக்கு வாய்த்திருப்பதை அடியோடு மறந்து கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் சில:

1.@chandrasekaranr3701,4 days ago

Om Sai Ram Sri Sai Ram Jaya Jaya Sai Ram ji God is Great hats of salute s engineer's
Praise the Lord hallelujah praise God wonderful Amazing this house protection is great God jesus only caring praise God.

3.Mashallah Alhamdulillah Aameen ameen yarabulalamen Allah blessings everything ameen
யார்யார் என்ன பேசிட்டு போங்க அது தேவன் மட்டும் அந்த வீட்டை காப்பாறினார் இதுதான் உண்மை ♥

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது.

😮 எல்லாம் என்னப்பன் ஈசனே. சிவகாமி அம்மன் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டும். எல்லாம் கருணை உள்ள சிவபெருமான் அருள்.

*****கருத்துரை வழங்கியுள்ள மும்மத[முன்னணி பெற்றவை] விசுவாசிகளிடம் நாம் முன்வைக்கும் ஒரே ஒரு கேள்வி: மேலே குறிப்பிடப்பட்ட ஒரே ஒரு வீட்டையும் அதிலிருந்தவர்களையும் காத்த உங்களின் கருணைக் கடவுள்கள், வெள்ளத்தில் சிக்கிச் சிதைந்து உருக்குலைந்து மரணத்தைத் தழுவிய ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களைக் காப்பாற்றத் தவறியதோடு, காணாமல்போன நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்களை உயிருடன் மீட்கத் தவறியது ஏனுங்க?