ஞாயிறு, 26 ஜூலை, 2026

பிள்ளையாரப்பா, பக்தனைக் காக்கும் பொறுப்பு உனக்கு இல்லையா அப்பா?!

உடல் பருமனும் சுவாசப் பிரச்சனையும் உள்ள பக்தர்கள் இடுக்குப் பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில்[இடுக்கு> சிறிய சந்து] புகுந்து வருவதைத் தவிர்க்க வேண்டும் என நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இருந்தும் ஆந்திர மாநில[பாவம் புறக்கணிக்கப்பட்ட திருப்பதி வெங்கடாஜலபதி]ப் பக்தர் ஒருவர் இடுக்கில் மாட்டிக்கொண்டு உயிரிழந்துள்ளார்.


பாறை இடுக்கில் புகுந்து வெளியேறுவதால் எல்லாம் புண்ணியம் சம்பாதிக்க இயலாது என்பதை அறியாத பக்தர்களும், இந்த நடைமுறைக்குத் தடை விதிக்காத நிர்வாகிகளும் கண்டிக்கத்தக்கவர்கள்[தண்டிக்கத்தக்கவர்களும்கட] என்பதில் விவாதத்திற்கு இடமே இல்லை.


பிள்ளையார்?


இவர் இருப்பது உண்மையானால், பக்தியின் பெயரால் பக்தர்களின் உயிர்கள் பறிபோவதை வேடிக்கை பார்க்கிற இவரும் கண்டனத்திற்கும் தண்டனைக்கும் உரியவர்தான்.


சக்தியுள்ள சாமிகளுக்குக் கண்டனம் தெரிவிக்க முடியும்; அவர்களைத் தண்டிப்பது[இருந்தால்] அற்ப மனிதர்களான நமக்குச் சாத்தியமே இல்லை!


பாவம் பக்தர்கள்!

https://www.maalaimalar.com/news/tamilnadu/andhra-devotees-dies-idukku-pillaiyar-temple-cave