ஞாயிறு, 21 ஜூன், 2026

‘யோகாப் பயிற்சி’... அம்மணச் சாமியார்[ஜட்டியுடன்] பாபா ராம்தேவ் இருக்க மோடி எதற்கு?!

//நாடு & கலாச்சாரங்களைக் கடந்து, உலக மக்களை ஒன்றிணைக்கும் உலகின் மிகப்பெரிய சமூகக் கொண்டாட்டமாக யோகா மாறியுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்//[ஊடகச் செய்தி].

யோகா என்பது உடம்பை வலுப்படுத்துவதற்கும் நலப்படுத்துவதற்குமான ஒரு பயிற்சி மட்டுமே[மனதைப் பக்குவப்படுத்துவதாகச் சொல்வது சரியல்ல; அதற்கு முறையான மனப் பயிற்சிகள் தேவை].

இது உலக மக்களை இணைக்கும் கொண்டாட்டமாக மாறியுள்ளது என்கிறார் நம் பிரதமர் யோககுரு மோடி.

உலகில் பல நாட்டு மக்களும் யோகா கொண்டாடுவது வழக்கமாகியிருக்கலாம். ந்த வழக்கம் ஒட்டுமொத்த உலக மக்களையும் இணைத்துவிட்டதாகச் சொல்வது சரியல்ல.

நம் பரம்பரை எதிரியான பாகிஸ்தான் மக்களும்தான் யோகா பயிற்சி செய்தார்கள். நம் மக்களும் பாகிஸ்தான் மக்களும் இப்பொது ஒருங்கிணைந்து தங்களுக்குள் கொஞ்சிக் குலாவுகிறார்களா?

உலக மக்கள் அத்தனைப்பேரும் வயிறு பசித்தால் உணவு உண்ணுகிறார்கள்; உடல் பசிக்கு ஆணும் பெண்ணுமாகச் சேர்க்கை செய்கிறார்கள். இதனாலெல்லாம் உலக மக்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாய்ச் செயல்படுகிறார்களா என்ன?

நாட்டு நலன் குறித்து உருப்படியாய் ஏதும் பேசாமல் இப்படி எதையாவது உருட்டுவதே நம் பிரதமருக்கு வழக்கமாகிப்போனது.

இவரைத் தவிர, வேறு எந்த நாட்டுத் தலைவராவது யோகா பயிற்சிக்குத் தலைமை தாங்கிப் பல மணி நேரத்தை வீணடித்திருக்கிறார்களா?

அரையே அரைக்கால் அங்குல ஜட்டியோடு யோகா பயிற்சி தருவதற்கென்றே ‘பாபா ராம்தேவ்’, கவர்ச்சியான தாடி மீசையோடு சத்துக்குரு ஜக்கி வாசுதேவ் போன்ற சாமியார்கள் இருக்கும்போது, கணக்கிலடங்காத பணிகளைச் சுமந்துகொண்டிருக்கும் மோடிக்கு ஏன் இந்த வெட்டி வேலை[வீட்டில் பயிற்சி செய்வதே போதுமே]?