மருந்தீசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருந்தீசர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூலை, 2020

கொரோனாவைக் குணப்படுத்திய மருந்தீசர்!!!










மருந்தீசர் ஆலயம்மருந்தீசர் ஆலயம், திருத்துறைப்பூண்டி.

#“அனைத்து விதமான வியாதிகளையும் தீர்க்க வல்லவர் மருந்தீசர். நோய் உள்ளவர்கள் இத்தலத்துக்கு வந்து ம்ருத்யுஞ்ச ஹோமம் மற்றும் நவகிரக ஹோமம் செய்தால் , விரைவில் நலம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. 

சமீபத்தில்கூட, அமெரிக்காவில் வசிக்கும் எங்கள் உறவினர் ஒருவர் கொரோனா பெருந்தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகி அவதிப்பட்டு வந்தார். அவருக்காக இத்தலத்தில் சிறப்பு வழிபாடு - பிரார்த்தனை செய்து, விபூதிப் பிரசாதம் அனுப்பி வைத்தோம். மருந்தீசரின் அருளால் விரைவில் அவர் நோயிலிருந்து மீண்டெழுந்தார். 

தற்போது நலமாக உள்ளார். இந்த ஈசன் நவகிரகங்களுக்கு அருளியவர் என்பதால், பக்தர்கள் தங்களது ஜாதகத்தை எடுத்து வந்து மருந்தீசரிடம் வைத்து அர்ச்சனை செய்து வழிபடுவது விசேஷம். அதனால், சகலவிதமான தோஷங்களும் நீங்கி மறுவாழ்வு பெறுவார்கள். 

ஶ்ரீவரசக்தி விநாயகர்

எதிரிகளால் தொல்லை, மனத்தில் வீண் பயம், பிதுர் சாபம் உள்ளிட்ட காரணங்களால் அவதிப்படுபவர்கள், அமாவாசையன்று நெய்தீபம் ஏற்றி மருந்தீசரை வழிபட்டால், பிரச்னைகள் விரைவில் விலகும்.

அகத்தியருக்குத் திருமணக் காட்சி தந்த தலம் இது என்பதால் திருமணம் ஆகாதவர்கள் இந்தத் தலத்து அம்பாளை வழிபட, திருமணத் தடை நீங்கும். தொடர்ச்சியாக 5 வாரம் இத்தலத்து ஈசனை அர்ச்சனை செய்து வழிபட்டால், சகல வியாதிகளில் இருந்தும் நிவர்த்தி அடையலாம்” என்கிறார்கள் கோயில் அர்ச்சகர்கள்.

இது, விகடன் செய்தி. https://www.vikatan.com/spiritual/gods/sri-piravi-marundeeswarar-temple-in-thruthuraipoondi
=====================================================================
கொரோனாவின் தாக்குதல் உலகெங்கும் அதிகரித்துவரும் நிலையில், இம்மாதிரியான தகவல்களைப் பரப்புவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல என்பது என் எண்ணம். கூடுதல் விமர்சனம் எதையும் முன்வைக்க விரும்பவில்லை.