திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுதல் தொடர்பாக, வழக்குகள் விசாரணைகள் எல்லாம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இடம்பெறுவதற்கு முன்னதாகவே, இந்தத் தீபம் ஏற்றுதலைச் நீதிபதி சுவாமிநாதன் அவர்கள் செய்திருந்தால், பக்தர்கள், ஊர் மக்கள், தமிழ்நாடு அரசு அதிகாரிகள்[சங்கிகள் விதிவிலக்கு] என்று எவரும் வீணான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருக்க வாய்ப்பே இல்லை.
இருப்பினும், இப்போதைய இவரின் இந்தப் புனிதமான போற்றுதற்குரிய செயல் தமிழ் மக்களுக்குப் பேருவகை அளிப்பதாக உள்ளது.
திருப்பரங்குன்றத்திலுள்ள இஸ்லாமியரின் தர்காவுக்கு அருகிலுள்ள தூண் என்றில்லை, உச்சிப்பிள்ளயார் கோயிலுக்கு அருகிலுள்ள தூண் மட்டுமல்ல, உலகின் எந்தவொரு மூலையிலுள்ள மலையிலோ, மண் மேட்டிலோ தூண் நட்டு, தீபம் ஏற்றினாலும் முருகப்பெருமான் ஏற்றுக் கருணை புரிவார் என்பதை நீதிபதியின் இந்தச் செயல் உணர்த்துகிறது.
நீதிபதி சுவாமிநாதன் அவர்களுக்கு ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது.
நன்றி நீதிபதி அவர்களே.
=========================