சனி, 9 மே, 2026

தனிப்பெரும் தலைவர் ‘திருமா’வுக்குத் ‘திருஷ்டி’ சுத்திப்போடுங்கப்பா!!!

தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க, ‘தவெக’ விஜய் கட்சி பெரும்பான்மை பெறுவதற்கான பேரத்தில் அயாராமல் ஈடுபட்டிருக்கும் சூழலில்.....

‘விசிக’ தலைவர் திருமாவளவன் தன் நிலைப்பாட்டைச் சற்று நேரத்தில் அறிவிப்பார் என்று, இவருக்கு அடுத்த கத்துக்குட்டித் தலைவர்கள் சொல்லுவதாக, இன்று காலையிலிருந்தே ஊடகங்கள் செய்தி வெளியிட்டவாறு உள்ளன.

பல மணி நேரம் கழிந்தும் திருமா திருவாய் மலர்ந்தருளவில்லை.

‘சிறிது நேரம்’ என்பது சில நிமிடங்களா, பல மணி நேரமா? ‘விசிக’வின் க.கு.தலைவர்கள் விளக்கம் அளிப்பார்களா?

இவருடைய[திருமாவளவன்] முடிவை ஒட்டுமொத்த இந்தியாவும் பெரும் பதற்றத்துடன் எதிர்பார்ப்பதை வைத்து, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத ஒரு மேல் மட்டத் தலைவராக இவர் உயர்ந்துவிட்டார் என்று சொல்லாம்.

இரண்டே இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை[‘திமுக’வுடன் கூட்டணி சேர்ந்து பெற்றவை]க் கைவசம் வைத்துள்ள இவர் பெற்றுள்ள உயர் அந்தஸ்து நம்மை வியக்க வைக்கிறது.

திருமா மாபெரும் அதிர்ஷ்டசாலி.

இதற்காக நாம் இவர் மீது பொறாமைப்படவில்லை. மாறாக.....

‘தவெக’ அமைச்சரவையில் பங்கு, உதவி முதல்வர் பதவி, முதல்வர் பதவி[+வைட்டமின் ‘ப’] என்றிவற்றில் எது வேண்டும் என்று விஜய்யிடம் சொல்லிப் பேரத்தை முடிக்கலாமே[ஆதரவு இல்லை என்றும் அறிவிக்கலாம்]? ஏன் நாட்கணக்கில் எதிர்பார்க்க வைத்து மக்களின் நாடித் துடிப்பை எகிற வைக்கிறார்?

தன் முடிவை எதிர்பார்த்து நாடே காத்திருப்பதில் பெறும் பெருமிதமும் பெருமகிழ்ச்சியும் நாட்கணக்கில் நீடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா?

தனிப்பெரும் தலைவர் திருமாவளவனுக்கே வெளிச்சம்!