செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அண்டவெளியில் ஒரு நீ...ண்...ட பார்வை!!!

#பெரு வெடிப்புக் கொள்கையின்படி அண்டவெளியில் உள்ள பொருள்கள் அனைத்தும் 12 தொடக்கம் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அதிகமான அடர்த்தியுடன் கூடிய, சிறிய அளவினதான, தீப்பிழம்பாக இருந்திருக்கின்றன. இன்று எங்களால் அறியப்படுகின்ற அண்டத்திலுள்ள பொருள்கள் அனைத்தும் சில மில்லி மீட்டர் அளவுக்குள் அடங்கியிருந்திருக்கும் எனக் கணிப்பிடப்படுகின்றது. இத் தீப்பிழம்பானது இன்று அறியப்படாத ஏதோ ஒரு காரணத்தினால் மிக வேகமாக விரிவடையத் தொடங்கிற்று. இதுவே பெரு வெடிப்பு (Big-Bang) எனப்படுகின்றது. ஒவ்வொரு விநாடியும் பல மடங்காக இவ் விரிவாக்கம் நடந்ததாக அறிவியலாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு விரிவடைந்தபோது வெப்பம் தணிந்த வளிமங்கள் ஆங்காங்கே விண்மீன் கூட்டங்களாக உருவாகியிருக்ககூடும் என அவர்கள் கூறுகிறார்கள். பல பில்லியன் ஆண்டுகள் கழிந்த பின்னும் அண்டம் இன்னும் விரிவடைந்து கொண்டே செல்வதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது#[விக்கிப்பீடியா]. 

இவ்வகையில் விரிவடைந்துகொண்டே போகும் அண்டம்/பிரபஞ்சம் ஏதோவொரு காலக்கட்டத் 
தில் படிப்படியாய்ச்சுருங்கிச் சுருங்கி அழிந்துபோகும் என்பதைக் கீழ்க்காணும் அறிவியல்
செய்தி உறுதிப்படுத்துகிறது.

#உலகின் மிகவும் சக்தி மிக்க தொலைநோக்கிகளைப் பயன்படுத்தி இரண்டு லட்சம் நட்சத்திரக் குழுமங்களைக் கண்காணித்த விஞ்ஞானிகள் கடந்த இரண்டு பில்லியன் ஆண்டுகளில் பிரபஞ்சம் வெளியிடும் சக்தி அரைவாசியாகக் குறைந்துள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
புதிய நட்சத்திரங்கள் பிறக்கும் வேகமும் குறைந்து வருவதாகக் கூறும் பழைய ஆய்வுகளையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

14 பில்லியன் ஆண்டுகள் பழமையான எமது பிரபஞ்சத்தின் விதி முடிய காலம் இருக்கிறது#[www.bbc.com/tamil/science/2015/08/150811_universe]

ஒட்டுமொத்தப் பிரபஞ்சமும் அதில் உள்ளடங்கிய பூமியும்  அழிந்துபோகும் நிலையில் மனித 
இனமும் பூண்டோடு அழியும் என்பதில் கிஞ்சித்தும் ஐயத்திற்கு இடமில்லை.

மீண்டுமொரு பெரு வெடிப்பு அல்லது அதிரடி வெடிப்பு காரணமாகப் புதிய பிரபஞ்சம் தோன்றக் 
கூடும். அது எப்போது நிகழும் என்பது எவருக்கும் தெரியாது. நிகழ்ந்தாலும், மனித இனமும் பிற 
உயிரினமும் வாழ்வதற்கு உகந்த ஒரு பூமியோ அது போன்றதொரு கோளோ அதில் உள்ளடங்கி 
இருக்கும் என்பது நிச்சயமில்லை.

ஆகவே, உலகோருக்கு நான் சொல்ல நினைப்பது ஒன்றுண்டு. 

‘மனித இனம் இருக்கும்வரை, மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரும் தத்தமக்குரிய குறுகிய வாழ்
நாளைத் தமக்கும் பிறருக்கும் பயன் தருவதாய் வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும். 
அத்தகையதொரு வாழ்வுக்கு ஆறாவது அறிவை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம்.
அதை விடுத்து, மகான் சொன்னார்; அவதாரம் சொன்னார்; அவர் சொன்னார், இவர் சொன்னார்
[அண்டசராசரமே இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும் நிலையில் அவதாரமும் இல்லை; 
மகானும் இல்லை; ஒரு புடலங்காயும் இல்லை] என்று கடவுளை நம்பி, மூடநம்பிக்கைகளை 
வளர்த்து மூடராய் வாழ்வது வருந்துதற்குரியது.
=============================================================================================
சில நூறு பேர் வாசிக்கவிருக்கும் ஒரு பதிவின் மூலம் ஒட்டுமொத்த உலகுக்கும் அறிவுரை வழங்கும்
நான் எத்தனை பெரிய புத்திசாலி! ஹ...ஹ...ஹ!!

ஞாயிறு, 30 ஜூலை, 2017

ஒரு வேலைக்காரியின் விலை? [அதிகபட்சம்]

ம்சவேணி எங்கள் வீட்டு வேலைக்காரி; விதவை; அம்சமான தேகக்கட்டுக்குச் சொந்தக்காரி. 

“என் குடிகாரப் புருஷன் பத்தாயிரம் கடன் வெச்சிட்டு மண்டையைப் போட்டுட்டான். வீட்டு வேலை செஞ்சி சம்பாதிக்கிறது வயித்துப்பாட்டுக்கே கட்டுபடியாகல. எப்படித்தான் கடனை அடைக்கப்போறனோ?” என்று என் இல்லத்தரசியிடம் அவள் புலம்புவது வழக்கம். அந்தப் பத்தாயிரத்தைக் கொடுத்தால் படிந்துவிடுவாள் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தேன். 

கார்காலத்தின் ஒரு இதமான காலைப்பொழுது.

வீடு பெருக்கிக்கொண்டிருந்தாள் அம்சவேணி.

“அம்சா.” -அழைத்தேன்.

“என்னங்கய்யா?” -நெருங்கி வந்தாள்.

“பத்தாயிரம் இருக்கு. வெச்சிக்கோ” -பணக்கட்டை நீட்டினேன்.

“எதுக்குங்க?”

“உன் கடனை அடைக்கத்தான். திருப்பித் தரவேணாம்.”  -என் ஒரு கை ஆறுதலாய் அவள் தோளைத் தொட்டுச் சரிந்து வழவழப்பான இடையைத் தடவியது.

என்னை ஏறிட்டுப் பார்த்த அம்சவேணி, “இது ஒரு தடவைக்கா, ஒரு நைட்டுக்கா, ஒரு மாசத்துக்கா?” என்று கேட்டாள்.

அவளின் இந்தக் கேள்வி என்னை நிலை தடுமாற வைத்தது. 

“உடம்பை வித்துப் பிழைக்கறவகூட, ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம் ரெண்டு லட்சம்னு வாங்குறா. என் புருஷன் கை தவிர இன்னொரு கை என்னைத் தொட்டதில்லை. கட்டுக் குலையாத கவர்ச்சியான உடம்பும் எனக்கிருக்கு. பத்தாயிரம் தர்றேன்னு சொல்லாம, பத்து லட்சம் தர்றேன். எனக்கு ‘வைப்பாட்டியா இரு’ன்னு  சொல்லியிருந்தா ரொம்பப் பெருமைப் பட்டிருப்பேன். ஒரு வேலைக்காரிதானேன்னு ரொம்பச் சீப்பா நினைச்சிட்டீங்க." -வாய்விட்டுச் சிரித்தாள் அம்சவேணி. அது கட்டுப்படுத்தப்பட்ட கடுங்கோபத்தின் வெளிப்பாடு.

“கிராமத்துக்குப் போன அம்மா வந்ததும், ‘நீ இல்லாத நேரத்தில் அம்சவேணி பத்தாயிரம் பணம் கேட்டா. அவள் நல்ல நடத்தையுள்ளவளாத் தெரியல. இனி வேலைக்கு வராதேன்னு விரட்டிட்டேன்னு சொல்லுங்க. தனக்கு வாய்ச்சவர் உத்தம புருஷன்னு அம்மா ரொம்பவே சந்தோஷப்படுவாங்க. அதனால எனக்கொன்னும் பாதிப்பு இல்ல. ஏன்னா,  நான் வேலைக்காரிதானே.”

கையிலிருந்த துடைப்பத்தைத்  தூக்கிக் கடாசிவிட்டுத் திரும்பிப் பாராமல் நடந்தாள் அம்சவேணி.
===============================================================================