செவ்வாய், 20 ஜனவரி, 2026

“இது கட்டங்கடைசி வாய்ப்பு! ‘தி.மு.க.’ காலிகள் ஆட்சியைக் கலைச்சிடுங்க பிரதமரே!”

நவீன அரசியல் சாணக்கியர் அமித்ஷுவைத் தளபதியாகக்கொண்ட பிரதமர் மோடி அவர்களே,

ஆளுநராம் ஆர்.என்.ரவி[ஆட்சியாளர்களுக்குத் தொடர்ந்து குடைச்சல் கொடுப்பதற்கென்றே உம்மால் அனுப்பப்பட்டவர்] தி.மு.க. அரசால் தொடர்ந்து அவமதிக்கப்பட்டால், அதைக் கலைத்துவிடுவது முன்கூட்டியே நீர் தீட்டியுள்ள திட்டம்.

கடந்த ஆண்டுகளில், சட்டமன்றம் தொடங்கும்போதெல்லாம் உம்முடைய அறிவுறுத்தலின்படி, ஏடாகூடமாக எதையேனும் உளறிக்கொட்டிவிட்டு மன்றத்திலிருந்து ரவியார் வெளியேறுவார். தி.மு.க.வினர் அவரைச் சற்றேனும் அவமதிக்கும் வகையில் விமர்சனம் செய்வார்கள். 

அந்த அவமதிப்பு அத்தனைக் கனமானதாக இருந்ததில்லை என்பதாலோ என்னவோ, தி.மு.க. ஆட்சியைக் கலைப்பதை நீர் தவிர்த்துவந்தீர்.

இன்று[20.01.2026] நடந்த சட்டமன்றக் கூட்டத்திலும், ரவியானவர் அவமதிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன[குறிப்பாக, 'பாஜக’ ஆதரவு ஊடகங்கள்> வரிவிடாமல் படித்திருப்பீர் என்பது எம் நம்பிக்கை].

ரவி அவமானப்படுத்தப்பட்டதைக்[கனமானதாக இல்லாமல் லேசானதாக இருப்பினும்] காரணம் காட்டி, உடனடியாகக் கலைப்பு[தி.மு.க. ஆட்சி] வேலையைச் செய்துமுடிப்பீர் என்று நம்புகிறோம்.

2026 தேர்தல்வரை தி.மு.க. ஆட்சி நீடித்தால், தில்லுமுல்லுகள் பல செய்து, தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அவர்கள் கைப்பற்றுவார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறோம்.

கில்லாடி ரவியின் முழுமையான ஆளுகையின் கீழ் தமிழ்நாடு இருந்தால்தான், கூட்டணிக் கட்சிகளின்[கொத்தடிமைகள்] துணையுடன் அதிதீவிரப் பிரச்சாரம் செய்து, தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிப்பது சாத்தியமாகும் என்றும் உம்மை எச்சரிக்கிறோம்.

வெல்க நீவிர்! தமிழ்நாட்டில் மலர்க ‘பாஜக’ ஆட்சி!!

திங்கள், 19 ஜனவரி, 2026

ஆன்மா இல்லை என்றால் கடவுளின் கதி?!

செத்தொழிந்த பிறகு, ஆன்மா என்றோ ஆவி, பூதம், பேய், பிசாசு என்றோ ஏதோ ஒரு வடிவில் மரணம் இல்லாப் பெரு வாழ்வு வாழ்வதுதான் மனிதராய்ப் பிறந்தவர்களின் ஆசை.

மேற்கண்டவற்றில், ‘ஆன்மா’ மீதான நம்பிக்கை மனித மனங்களில் அழுத்தமாகப் பதிந்ததுவிட்டது.

மரணித்த பிறகு, அந்த ஆன்மா வெறுமனே அண்டவெளியில் திரிந்துகொண்டிருப்பதை அவர்கள் விரும்பாததால், பரலோகம்[ஏதோ ஓர் உலகம்], தேவலோகம், சொர்க்கம் எல்லாம் இருப்பதாகவும், புண்ணியம் செய்தால் அங்கெல்லாம் சென்று[ஆன்மாவாக] காலவரையறை இல்லாமல் களித்திருக்கலாம் என்றும் ஆசைப்பட்டார்கள்.

புண்ணியத்திற்கு எதிரான பாவமும் நினைவுக்கு வரவே, பாவம் செய்தவர்கள் நரகம் சேர்ந்து பெரும் துயரத்தில் மூழ்கிக் கிடப்பார்கள் என்று முடிவு செய்தார்கள்.

பாவமோ புண்ணியமோ, நரகமோ சொர்க்கமோ, ஆன்மா இடம் மாறி மாறித் துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தாலும், தங்களுக்கெறு ஓர் ஆன்மா தேவை என்பது மனிதர்களின் விருப்பம். அதன் மூலம் இறந்த பிறகும் இருந்துகொண்டே இருக்க வேண்டும் என்பது அவர்களின் அழிவில்லாத ஆசையாக உள்ளது.

என்றேனும் ஒரு நாள்.....

ஆன்மாவோ, சாகும்போது உடம்புக்குள்ளிருந்து வெளியேறுகிற எதுவுமோ இல்லை என்று அறிவியல் ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுவிட்டால்....

கடவுள் என்றொருவர்[ஆன்மாவைச் சொர்க்கத்திற்கு நரகத்திற்கும் அனுப்புபவர்] இருந்தாலும்[அவர் மீதான நம்பிக்கை சிதையவும் வாய்ப்புள்ளது], மற்ற உயிரினங்களுக்கு உள்ளது போல், இன்பத் துன்பங்களுடனான அற்ப ஆயுளை மட்டும் தந்ததற்காக[ஆன்மா, பாவம், புண்ணியம் என்று கதையளந்து பிழைப்பு நடத்தும் ‘சத்துக்குரு’ ஜக்கி போன்றோர் பாடு திண்டாட்டம்] மனிதர்கள் அவரை நிந்திப்பார்கள்.

கோயில் கட்டுதல், விழா எடுத்தல், கொண்டாடுதல் என்று கோடிக்கணக்கில் மனித மண்டூகங்கள் செய்யும் செலவு மிச்சமாகும்! 

ஹி... ஹி... ஹி!!!