பக்கங்கள்https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_1.html
- 'பசி'பரமசிவம்
- தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், நம் கட்சித் தலைவர்கள் மனம்போன போக்கில், நிறைவேற்றுவதற்கான சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளையெல்லாம் அள்ளி இறைக்கிறார்கள்; நிறையப் பொய் சொல்லுகிறார்கள்; எதிரணியினரை வரம்பில்லாமல் வசைபாடுகிறார்கள். இவற்றால் எல்லாம் மக்களுக்குப் பயன் இல்லை என்பதோடு மக்களின் நேரத்தை இவை வீணடிக்கின்றன என்பதால், தேர்தல் முடிவுகள் வெளியாகும்வரை இவர்களின் பரப்புரைகள் ஊடகங்களில் வெளியாவதைத் தடை செய்வது நல்லதொரு முன்னுதாரணமாக அமையும்.