நான்.....

எனது படம்
ஒரு பிரபலமான நடிகனாக மக்களில் கணிசமானவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த விஜய், தேர்தல் பரப்புரையில் ‘ஜோசப்’ஐ மறைத்தார்[சான்றிதழில்> ஜோசப் விஜய்?]. வெற்றிபெற்று முதல்வர் ஆனதில் எவ்விதத் தவறும் இல்லை. முதல்வர் ஆன பிறகும் ‘விஜய்’ ஆகவே தன்னை முன்னிலைப்படுத்தியிருத்தல் வேண்டும். மாறாக, பெயருடன் ‘ஜோசப்’ சேர்த்துத் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அடையாளப்படுத்தியதோடு, சட்டமன்றத்திலேயே தன் மதத்தவரான சபாநாயகரையும் அமைச்சரையும் அதை உயர்த்திப் பேச அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. தீவிர இந்துமதப் பற்றாளர் பிரதமர் மோடி இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது ஜோசப்பின் அதிர்ஷ்டம்[நல்வாய்ப்பு]. தான் செய்யும் குற்றங்களை, தன் மீது தீராத மயக்கம்கொண்ட வாக்காளர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்னும் ஜோசப்பின் நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.

சனி, 8 ஜூன், 2019

பொய் சொல்லலாம் வாங்க!!![10% கற்பனை; 90% உண்மை]

ருத்துவ மனையிலிருந்த நண்பரைப் பார்க்க ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தேன்.

பழைய பேருந்து நிலையத்திற்குச் சற்றுத் தொலைவிலிருந்த திவள்ளுவர் சிலையைக் கடந்து மருத்துவமனைக்குச் செல்லும் சாலையில் திரும்பியபோது, ஒரு தேனீர்க் கடையின் முன்னால் திரண்டிருந்த கும்பல் என் கவனத்தைக் கவர்ந்தது.

ஸ்கூட்டரை ஓரங்கட்டி நிறுத்தி, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு முதியவரிடம், “என்னங்க ஐயா கும்பல்?” என்றேன்.

“டீ குடிக்க வந்த ரெண்டு பேருக்குள்ள ஏதோ தகராறு.  கும்பல் சேரவும் ரெண்டு பேர் ஜாதிக்காரங்களும் தலையிட ஆரம்பிச்சுட்டாங்க. எந்த நேரத்திலும் ‘கைகலப்பு’ நேரலாம். அது பெரிய ஜாதிக்கலவரமாக மாறவும் வாய்ப்பிருக்கு” என்றார் ’அனுபவசாலி’யான அந்தப் பெரியவர்.

அடுத்து நடக்கவிருப்பதை அறியும் ஆர்வம் இருந்தாலும், நண்பர் ஆபத்தான கட்டத்தில் இருந்ததால், நின்று கவனிக்க நேரமில்லை; ஸ்கூட்டரைக் கிளப்பினேன்.

நேர்ச் சாலையில், அரை நிமிடப் பயணம். இடப்புறம் திரும்ப வேண்டும். எதிரே வந்த ஒரு பைக்காரர், உரத்த குரலில், “என்ன சார் அங்கே கும்பல்?” என்று கேட்டு வழி மறிப்பது போல் நின்றார்.

“ஏதோ ஜாதிப் பிரச்சினை” என்று சொல்லிவிட இருந்தேன்; சொல்லவில்லை. அப்படி நான் சொல்ல, அந்த இரண்டு சாதிகளில் ஒன்றைச் சார்ந்தவராக இவர் இருந்துவிட்டால், நிச்சயம் தன் ஆட்களுடன் கை கோர்ப்பார். அதைத் தடுக்கும் நல்லெண்ணத்துடன், ”ரெண்டு குடிகாரனுங்க சண்டை போட்டுக்குறானுங்க. அதை வேலை வெட்டி இல்லாத ஒரு கும்பல் வேடிக்கை பார்க்குது. நீங்க போங்க சார். போயி உங்க வேலையைப் பாருங்க” என்று ஒரு பொய்யை உதிர்த்துவிட்டு வண்டியை நகர்த்தினேன். ஒரு ஜாதி மோதலைத் தடுப்பதில், என்னாலான சிறு பங்கைச் செலுத்திவிட்ட திருப்தி எனக்கு.

பொய் சொல்லக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. ஆனா, நல்லதை நினைச்சி ஒரு பொய் சொல்லிட்டேன்.

என்னிடத்தில் நீங்க இருந்திருந்தா நீங்களும் இப்படி ஒரு பொய்யைச் சொல்லியிருப்பீங்கதானே?
========================================================================================
எப்போதோ எங்கேயோ படித்த நினைவு வருகிறதா? உங்களுக்கு நினவாற்றல் ரொம்பவே அதிகம்! 2013இல் 'கடவுளின் கடவுள்' தளத்தில் அடியேன் கிறுக்கியது!! ஹி...ஹி...ஹி!!!