நான்.....

எனது படம்
ஒரு பிரபலமான நடிகனாக மக்களில் கணிசமானவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த விஜய், தேர்தல் பரப்புரையில் ‘ஜோசப்’ஐ மறைத்தார்[சான்றிதழில்> ஜோசப் விஜய்?]. வெற்றிபெற்று முதல்வர் ஆனதில் எவ்விதத் தவறும் இல்லை. முதல்வர் ஆன பிறகும் ‘விஜய்’ ஆகவே தன்னை முன்னிலைப்படுத்தியிருத்தல் வேண்டும். மாறாக, பெயருடன் ‘ஜோசப்’ சேர்த்துத் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அடையாளப்படுத்தியதோடு, சட்டமன்றத்திலேயே தன் மதத்தவரான சபாநாயகரையும் அமைச்சரையும் அதை உயர்த்திப் பேச அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. தீவிர இந்துமதப் பற்றாளர் பிரதமர் மோடி இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது ஜோசப்பின் அதிர்ஷ்டம்[நல்வாய்ப்பு]. தான் செய்யும் குற்றங்களை, தன் மீது தீராத மயக்கம்கொண்ட வாக்காளர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்னும் ஜோசப்பின் நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

🔴கிண்டியில் இருப்பது ஆளுநர் மாளிகையா ஆண்டி மடமா!?!?!?


//கொலுவில் வைக்கப்படும் பொம்மைகள் பெரும்பாலும் களிமண்ணால் செய்யப்பட்டு, அடர்ந்த நிறங்களால் வர்ணம் பூசப்பட்டவையாக இருக்கும்//

கொலு வைப்பதன் நோக்கம் பொம்மை வடிவில் அம்பாளை வழிபடுவது[மனித உருவில் நடமாடும் அனைத்துப் பெண்களும் அம்பாள்களே. அவர்களையே வழிபடலாமே?] என்கிறார்கள். இதன் உண்மை நோக்கம், கொலு வைப்பவர்கள் தங்களின் மண்டையில் களிமன்தான் உள்ளது என்பதை அடையாளப்படுத்துவதே.

இதைச் செய்வது[தனிப்பட்ட முறையில்] அவரவர் விருப்பம் சார்ந்தது.

பல ஏக்கர் நிலப்பரப்பில், பல கோடிகள் செலவு செய்து உருவாக்கப்பட்ட  மாளிகையில், ராஜபோகியாக வாழ்ந்துகொண்டிருக்கும் ஆளுநன் ஆர்.என்.ரவி[அரசுப் பணியாளர்] கொலு விழா கொண்டாடுகிறார் என்பது செய்தி[காணொலி].

தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுவதைச் சீர்குலைப்பதற்கென்றே அனுப்பப்பட்ட இந்த நபர், அவ்வப்போது தமிழர்களின் சிந்திக்கும் அறிவைச் சிதைத்திடும் அடாவடித்தனங்களையும் செய்துகொண்டிருக்கிறார்.

அவற்றில் இதுவும் ஒன்று.

மூடநம்பிக்கைகளை வளர்த்து அரியணை ஏறும் சங்கிகளின் ஆட்சி இந்த மண்ணில் நீடிக்கும்வரை, இம்மாதிரியான ஆளுநன்களுக்குக் கொண்டாட்டம்தான்; தமிழர்களுக்கோ திண்டாட்டம்!