நான்.....

எனது படம்
ஒரு பிரபலமான நடிகனாக மக்களில் கணிசமானவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த விஜய், தேர்தல் பரப்புரையில் ‘ஜோசப்’ஐ மறைத்தார்[சான்றிதழில்> ஜோசப் விஜய்?]. வெற்றிபெற்று முதல்வர் ஆனதில் எவ்விதத் தவறும் இல்லை. முதல்வர் ஆன பிறகும் ‘விஜய்’ ஆகவே தன்னை முன்னிலைப்படுத்தியிருத்தல் வேண்டும். மாறாக, பெயருடன் ‘ஜோசப்’ சேர்த்துத் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அடையாளப்படுத்தியதோடு, சட்டமன்றத்திலேயே தன் மதத்தவரான சபாநாயகரையும் அமைச்சரையும் அதை உயர்த்திப் பேச அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. தீவிர இந்துமதப் பற்றாளர் பிரதமர் மோடி இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது ஜோசப்பின் அதிர்ஷ்டம்[நல்வாய்ப்பு]. தான் செய்யும் குற்றங்களை, தன் மீது தீராத மயக்கம்கொண்ட வாக்காளர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்னும் ஜோசப்பின் நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

நம் பிரதமருக்குத் தேவை தினசரித் ‘திருஷ்டி’ கழித்தல்!!!

இது[பாரத்> இந்தியா] புண்ணியப் பூமி. மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.

இல்லையெனில், ஒப்பனையில் சாதனை நிகழ்த்தியவரும், கம்பீரமும், கவர்ச்சியும், கொள்ளை அழகும் உள்ள ஒருவரைப் பிரதமராகப் பெறும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

உலக அளவில் பிரதமர், அல்லது அதிபர்களுக்கான ஆணழன் போட்டி நடத்தினால்  அதில் வென்று கிரீடம் சூடுபவர் நம் பிரதமரே.

அவரின் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கு நம் வேண்டுகோள்:

நம் பிரதமருக்குத் ‘திருஷ்டி’ கழிக்கும் சடங்கை நாள் தவறாமல் நிறைவேற்றுவீர்!

மோடி நீடூழி வாழ்க!