நான்.....

எனது படம்
ஒரு பிரபலமான நடிகனாக மக்களில் கணிசமானவர்களின் ஆதரவைப் பெற்றிருந்த விஜய், தேர்தல் பரப்புரையில் ‘ஜோசப்’ஐ மறைத்தார்[சான்றிதழில்> ஜோசப் விஜய்?]. வெற்றிபெற்று முதல்வர் ஆனதில் எவ்விதத் தவறும் இல்லை. முதல்வர் ஆன பிறகும் ‘விஜய்’ ஆகவே தன்னை முன்னிலைப்படுத்தியிருத்தல் வேண்டும். மாறாக, பெயருடன் ‘ஜோசப்’ சேர்த்துத் தன்னை ஒரு கிறிஸ்தவனாக அடையாளப்படுத்தியதோடு, சட்டமன்றத்திலேயே தன் மதத்தவரான சபாநாயகரையும் அமைச்சரையும் அதை உயர்த்திப் பேச அனுமதிப்பது கண்டிக்கத்தக்கது. தீவிர இந்துமதப் பற்றாளர் பிரதமர் மோடி இதைக் கண்டுகொள்ளாமலிருப்பது ஜோசப்பின் அதிர்ஷ்டம்[நல்வாய்ப்பு]. தான் செய்யும் குற்றங்களை, தன் மீது தீராத மயக்கம்கொண்ட வாக்காளர்கள் கண்டுகொள்ளமாட்டார்கள் என்னும் ஜோசப்பின் நம்பிக்கையும் காரணமாக இருக்கலாம்.

திங்கள், 22 செப்டம்பர், 2025

கோடிகளில் புரளும் கூத்தாடி[விஜய்]யின் கட்டுக்கடங்காத கொட்டமும் கொண்டாட்டமும்!!!

//கூத்தாடி விஜய் திருவாரூருக்கு வந்தாராம். இந்தக் கோடிகளில் புரளும் குபேரனை வரவேற்கும் விதமாகக் கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவித்தார்களாம் ‘தவெக’ நிர்வாகிகள். தனது பிரச்சார வாகனத்தில் நின்றபடி விஜய் இதைப் பெற்றுக்கொண்டாராம்//[பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு குறிக்கோள் இல்லாத ஊடகக்காரன்கள் வெளியிட்ட செய்திகளில் இதுவும் ஒன்று].

கழுத்தைத் தீண்டாத அதி பிரமாண்ட மாலை. அதை அந்தரத்தில் தொங்கவிட ஒரு கிரேன். இவற்றிற்கான செலவு ஆயிரக்கணக்கில்.

விசிலடிச்சான் குஞ்சுகள் எழுப்பும் ஆரவாரங்களுக்கும் கரவொலிகளுக்கும் இடையே, அந்தரத்தில் போடப்பட்ட அதி பிரமாண்ட மேடையில், தடியன்களின் பாதுகாப்புடன் ஆனந்தத்தில் துள்ளி நடைபயிலும் நடிகனுக்கு இது தெரியும்தானே?

பார்வையாளருக்குக் குனிந்து குனிந்து கும்பிடு போட்டுக் கையசைக்கும் இந்த அதிரடி அரசியல்வாதிக்கு, தெருவோரங்களில் கையேந்திக் காத்திருக்கும் பிச்சைக்காரர்கள் கண்ணில் பட்டதே இல்லையா?

வெற்று ஆடம்பரத்துக்காக வீணடித்த ஆயிரக்கணக்கான ரூபாய்களை[மொத்தச் செலவையும் கணக்கிட்டால் அது கோடியைத் தாண்டக்கூடும்]ஊரூராய்ச் சென்று, பட்டினியில் வாடும் பிச்சைக்காரர்களுக்குக் கொடுத்திருந்தால், அவை அவர்களின் ஒரு நாள் பசி தணியப் பயன்பட்டிருக்கும்.

இது ஏன் இந்தப் புதுரகப் புரட்சித் தலைவனின் புத்தியில் உறைக்கவில்லை?

மக்களை ஏமாற்றிக் கோடி கோடியாகச் சம்பாதிப்பதற்கென்றே இங்கு எவனெவனோ அரசியலுக்கு வருகிறான். அவன்களின் நடிப்பில் புத்தியையும் தன்மானத்தையும் இழப்பதே காட்டுமிராண்டித் தமிழனுக்கு வழக்கமாகிப்போனது!

* * * * *

https://www.dailythanthi.com/news/tamilnadu/police-register-case-against-3-people-for-throwing-a-huge-garland-at-vijay-using-a-crane-1180910