பொதுமகன்[பொதுமக்கள்] நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்திருக்க, அதிகாரி சற்றே குனிந்து தலை தாழ்த்தி, இரு கரம் நீட்டித்தான் லஞ்சம் வாங்குதல் வேண்டும்’[ஒளிவுமறைவு கூடாது] என்றும் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டால், புதிய அரசுக்கு அமோகமான பாராட்டுகள் கிடைக்கும்.
எந்தவொரு கொம்பன் முதல்வராக வந்தாலும், ஏதாவதொரு திருட்டு[+குறுக்கு] வழியில் இவர்கள் கையூட்டு[லஞ்சம்] வாங்குவது தொடரும் என்பது உறுதி. அதனால்தான் இதையும் சட்டபூர்வமாக்கி, வாங்குபவர் கொடுப்பவருக்கு மரியாதை செலுத்துதல் வேண்டும் என்கிறோம்.
***கிண்டல், நக்கல் எல்லாம் இல்லாமல், அப்பட்டமாகப் புதிய முதலமைச்சர் விஜய் அவர்களிடம் நாம் வலியுறுத்த விரும்புவது.....
பொதுமக்களுக்கு மரியாதை மதிப்பு எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்; அவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கில் இவர்கள்[சார்பதிவாளர்கள்] கொள்ளையடிப்பதைத் தடுக்க முதலில் வழி தேடுங்கள்.
லஞ்சம் வாங்காத சார்பதிவாளர்களே இல்லை என்னும் நிலையில்[பதிவு செய்வதிலும் முறைகேடுகள் இடம்பெறுகின்றன], இந்த அட்டூழியத்தைத் தடுத்து நிறுத்துவது அத்தனை எளிதல்ல என்பதையும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் முதலமைச்சரும் புரிந்துகொள்வது மிக முக்கியம்.

