அவளுக்கு[பெண்களுக்கு] எதற்குச் சிறப்புப் படை, அதிரடிப் படை எல்லாம்?[‘சிங்கப்பெண்’ படையில் சிங்கம் போன்ற பெண்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது].
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பினால், தனியாக ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி, அதற்குப் ‘பெண்கள் பாதுகாப்புப் படை’ என்று பெயர் சூட்டினாலே போதும்.
‘சிங்கப்பெண்’ பாதுகாப்புப் படை, ‘புலிப்பெண்’ புரட்சிப் படை என்றெல்லாம் ஒரு புதிய அமைப்பிற்குப் பெயர் சூட்டுவது மக்களைக் கவர்வதற்காகவே, திரைப்படத்தில் கதாநாயகன் & நாயகிகளுக்குக் கவர்ச்சிகூட்ட ஒப்பனை செய்வது போல.
புதியத் திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதற்கு முன்னால்[எளிதாகப் புரியும் வகையில்] முதல்வர் விஜய் கொஞ்சமேனும் சிந்திப்பது நல்லது; கவர்ச்சி காட்டி மக்களைக் கவரும் தந்திரத்தைக் கைவிடுவது அவருக்கும் மக்களுக்கும் நன்மை பயப்பதாக அமையும்.