'சிங்கப் பெண் சிறப்புப் படை': பதவியேற்பு மேடையிலேயே முதலமைச்சர் விஜய் முதல் கையெழுத்து![spotlightmedia_tamil] 3 h
‘காட்டு ராஜா’ என்று அழைக்கப்படும் சிங்கம் அதீத ஆற்றல் வாய்ந்த விலங்குகளில்[புலி, யானை...] ஒன்று. வேறு எந்தவொரு விலங்கின் துணையும் இல்லாமல், தன்னைத்தானே பாதுகத்துக்கொள்ளும் வல்லமை படைத்தது
‘சிங்கப்பெண்’ என்றால் சிங்கத்தைப் போலவே தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் ஆற்றல் படைத்தவள் என்று பொருள்.
அவளுக்கு[பெண்களுக்கு] எதற்கு சிறப்புப் படை, அதிரடைப் படை எல்லாம்?[‘சிங்கப்பெண்’ படையில் சிங்கம் போன்ற பெண்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்களா என்னும் கேள்வியும் எழுகிறது].
பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரும்பினால், தனியாக ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி, அதற்குப் ‘பெண்கள் பாதுக்கப்புப் படை’ என்று பெயர் சூட்டினாலே போதும்
‘சிங்கப்பெண்’ பாதுகாப்புப் படை, ‘புலிப்பெண்’ புரட்சிப் படை என்றெல்லாம் ஒரு புதிய அமைப்பிற்குப் பெயர் சூட்டுவது மக்களைக் கவர்வதற்காகவே, திரைப்படத்தில் கதாநாயக, நாயகிகளுக்குக் கவர்ச்சியாக ஒப்பனை செய்வது போல.
புதியத் திட்டங்களுக்குப் பெயர் சூட்டுவதற்கு[எளிதாகப் புரியும் வகையில்] முன்னால் முதல்வர் விஜய் கொஞ்சமேனும் சிந்திப்பது நல்லது.