தனி மனிதர்கள் தவறிழைப்பது போலவே, அரசின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களும் அறிந்தோ அறியாமலோ, மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலான அரசாணைகளைப் பிறப்பிப்பது இயல்பானதுதான்.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், ஜோதிடருக்கு உயர் பதவி அளித்து ஆணை பிறப்பித்தது அம்மாதிரியான நிகழ்வுகளில் ஒன்று.
அரசால்/அரசுகளால் அவ்வாறு பிறப்பிக்கப்பட்ட ஆணையைத் திருத்தி வெளியிடுவதோ, திரும்பப்பெறுவதோ மிக அரிதான நிகழ்வாகவே உள்ளது.
செய்த தவற்றை உணர்ந்து விஜய் அதைத் திரும்ப்பெற்றது வரவேற்கத்தக்கது.
கடும் எதிர்ப்புகளுக்கிடையே, ஆணை பிறப்பித்த சூட்டோடு[புதிய வரலாறு] அதைச் செல்லாததாக ஆக்கியது பெரும் பாராட்டுக்குரியது.
